8 Dec 2020

தியாகராஜர் கீர்த்தனை 2 (எவரு தெலிய)



தியாகராஜ கிருதி - எவரு தெலிய - ராகம் தோடி - Evaru Teliya - Raga Todi

பல்லவி
எவரு தெலிய பொய்யேரு நீ மஹிமலு

அனுபல்லவி
பு4விலோ 1வரமௌ நாக3 புரமுன கனுகொ3ண்டி
லவ லேஸ1மைனனு 2நீலாயதாக்ஷி ஸாமர்த்2ய(மெவரு)

சரணம் 1
கருகு3 ப3ங்கா3ரு வல்வ கட்டி 3நிர்ஜர தரு
விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர
கரமுன சிலுகனு பட்டி அதி3யு கா3க
4ஹருனி அட்டிட்டாடி3ஞ்சினட்டி நீ லீலலனு (எவரு)

சரணம் 2
ஹரி ப்3ரஹ்மாது3லு நின்னு 5கொல்வனா வேள ஸுர
விரி போ3ணுலந்த3முதோ 6நில்வனமர வார
தருணுலு நாட்யமுசே கொல்வனன்னியு ஜூசி
கருணா ரஸமு ஜில்கி பில்வனட்டி நீ த3ய(னெவரு)

சரணம் 3
நாக3 பூ4ஷணுனிகி ராணிவைன 7நின்னு
வினா க3தியெவரு நீல வேணி 8ப4க்துல பாலி
பா4க3தே4யமைன ஸ1ர்வாணி ஸந்ததமுனு
த்யாக3ராஜு பல்கின வாணி 9ப்ரியமைன நி(ன்னெவரு)

பாடல் பதம் பிரித்தல் - பொருள்

பல்லவி
எவரு/ தெலிய பொய்யேரு/ நீ/ மஹிமலு/
எவர்/ அறிந்தனர்/ உனது/ மகிமைகளினை/

அனுபல்லவி
பு4விலோ/ வரமௌ/ நாக3/ புரமுன/ கனுகொ3ண்டி/
புவியில்/ புனித/ நாக/ புரத்தினில்/ கண்டுகொண்டேன்/

லவ லேஸ1மு/-ஐனனு/ நீலாயதாக்ஷி/ ஸாமர்த்2யமு/-(எவரு)
எள்ளளவு/ ஆகிலும்/ நீலாயதாட்சியின்/ திறமையினை/ எவர்...

சரணம் 1
கருகு3/ ப3ங்கா3ரு/ வல்வ/ கட்டி/ நிர்ஜர/ தரு/
உருக்கிய/ பொன்/ ஆடை/ யணிந்து/ வானோர்/ தரு/

விருலனு/ கொப்பு/ நிண்ட3/ ஜுட்டி/ ஸொக3ஸு/ மீர/
மலர்களை/ கொண்டை/ நிறைய/ சுற்றி/ சொகுசு/ மீர/

கரமுன/ சிலுகனு/ பட்டி/ அதி3யு கா3க/
கரத்தினில்/ கிளியினை/ யேந்தி/ மேலும்/

ஹருனி/ அட்டு/-இட்டு/-ஆடி3ஞ்சின/-அட்டி/ நீ/ லீலலனு/ (எவரு)
அரனை/ அப்படி/ யிப்படி/ ஆட்டிவைத்த/ அத்தகைய/ உனது/ திருவிளையாடல்களை/ எவர்...

சரணம் 2
ஹரி/ ப்3ரஹ்மா-ஆது3லு/ நின்னு/ கொல்வ/-ஆ வேள/ ஸுர/
அரி/ பிரமாதியர்கள்/ உன்னை/ சேவிக்க/ அவ்வேளை/ வானோர்/

விரி போ3ணுலு/-அந்த3முதோ/ நில்வ/-அமர/ வார/
பூங்குழலியர்/ ஒயிலாக/ நிற்க/ வானோர்/ ஆடல்/

தருணுலு/ நாட்யமுசே/ கொல்வ/-அன்னியு/ ஜூசி/
அணங்குகள்/ நாட்டியமாடி/ சேவிக்க/ யாவற்றினையும்/ கண்டு/

கருணா/ ரஸமு/ ஜில்கி/ பில்வ/-அட்டி/ நீ/ த3யனு/-(எவரு)
கருணை/ ரசத்தினை/ சிந்தி/ அழைக்கும்/ அத்தகைய/ உனது/ தயையினை/ எவர்...

சரணம் 3
நாக3/ பூ4ஷணுனிகி/ ராணிவைன/ நின்னு/
அரவு/ அணிவோனின்/ இராணியாகிய/ உன்னை/

வினா/ க3தி/-எவரு/ நீல வேணி/ ப4க்துல/ பாலி/
அன்றி/ புகல்/ யாரே/ கருங்குழலி/ தொண்டர்/ பங்கில்/

பா4க3தே4யமைன/ ஸ1ர்வாணி/ ஸந்ததமுனு/
நற்பேறாகிய/ சர்வாணி/ எவ்வமயமும்/

த்யாக3ராஜு/ பல்கின/ வாணி/ ப்ரியமைன/ நின்னு/-(எவரு)
தியாகராசன்/ கூறிய/ சொற்களை/ விரும்பும்/ உன்னை/ எவர்...


எவரு தெலிய பொய்யேரு நீ மஹிமலு

அ. பு4விலோ வரமௌ நாக3 புரமுன கனுகொ3ண்டி
லவ லேஸ1(மை)னனு நீ(லா)ய(தா)க்ஷி ஸாமர்த்2ய(மெவரு)

ச1. கருகு3 ப3ங்கா3ரு வல்வ கட்டி நிர்ஜர தரு
விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர
கரமுன சிலுகனு பட்டி அதி3யு கா3க
ஹருனி அட்(டி)ட்(டா)டி3ஞ்சி(ன)ட்டி நீ லீலலனு (எவரு)

ச2. ஹரி ப்3ரஹ்(மா)து3லு நின்னு கொல்வ(னா) வேள ஸுர
விரி போ3ணு(ல)ந்த3முதோ நில்வ(ன)மர வார
தருணுலு நாட்யமுசே கொல்வ(ன)ன்னியு ஜூசி
கருணா ரஸமு ஜில்கி பில்வ(ன)ட்டி நீ த3ய(னெவரு)

ச3. நாக3 பூ4ஷணுனிகி ராணிவைன நின்னு
வினா க3தி(யெ)வரு நீல வேணி ப4க்துல பாலி
பா4க3தே4ய(மை)ன ஸ1ர்வாணி ஸந்ததமுனு
த்யாக3ராஜு பல்கின வாணி ப்ரியமைன நி(ன்னெவரு)

எவர் அறிந்தனர் உனது மகிமைகளினை?

புவியில், புனித நாகபுரத்தினில் கண்டுகொண்டேன்;
எள்ளளவாகிலும், நீலாயதாட்சியின் திறமையினை
எவர் அறிந்தனர்?

1. உருக்கிய பொன்னாடை யணிந்து, வானோர் தரு
மலர்களை கொண்டை நிறையச் சுற்றி, சொகுசு மீர
கரத்தினில் கிளியினையேந்தி, மேலும்
அரனை, அப்படியிப்படி ஆட்டிவைத்த அத்தகைய உனது
திருவிளையாடல்களை எவர் அறிந்தனர்?

2. அரி, பிரமாதியர்கள் உன்னைச் சேவிக்க, அவ்வேளை வானோர்
பூங்குழலியர் ஒயிலாக நிற்க, வானோர் ஆடல்
அணங்குகள் நாட்டியமாடி சேவிக்க, யாவற்றினையும் கண்டு,
கருணைரசத்தினைச் சிந்தி, அழைக்கும் அத்தகைய உனது
தயையினை எவர் அறிந்தனர்?

3. அரவணிவோனின் இராணியாகிய உன்னை
அன்றி புகல் யாரே, கருங்குழலி! தொண்டர் பங்கில்
நற்பேறாகிய சர்வாணி! எவ்வமயமும்,
தியாகராசன் கூறிய சொற்களை விரும்பும் உன்னை
எவர் அறிந்தனர்?

நாகபுரம் - நாகப்பட்டினம்
நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் பார்வதியின் பெயர்
வானோர் தரு - பாரிசாதம்
கருணைரசம் - நவரசங்களில் ஒன்று
அரவணிவோன் - சிவன்
சர்வாணி - பார்வதி



No comments:

Post a Comment