12 Aug 2021

நீலலோசனி ❤️ மீனலோசனி


கருந்தடங்கண்ணி அங்கயற்கண்ணி

🎯 #நாகை மற்றும் #மதுரை ஸ்தலங்களுக்கு இடையேயான சில ஒப்பீடுகள் ..

🎯 சிவபெருமானின் நாகம் வலம் செய்து உண்டான நகரம் மதுரை என்பதால் #திருஆலவாய் (ஆலம் என்றால் நாகம்) என்ற பெயர் உண்டு. நாகர்கள் வசித்து சிவபூஜை செய்த நகரம் #நாகப்பட்டினம் என அழைக்கப்படுகிறது.

🎯 மதுரையில் சொக்கநாதப் பெருமான் 64 #திருவிளையாடல்கள் நிகழ்த்தியது போல், நாகை உள்ளிட்ட #சப்தவிடங்கர் தலங்களில் தியாகராஜப் பெருமான் 360 திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார்.

🎯 மதுரையில் #சுந்தரேஸ்வரர் ஆகவும் நாகையில் #சுந்தர_விடங்கர் ஆகவும் சுவாமி அருளாட்சி புரிகிறார்.

🎯 #பதஞ்சலி, #வியாக்ரபாதர் முனிவர்களுக்கு #நடராஜர் திருநடனம் காட்டி அருளிய பல தலங்களில் இவூர்களும் அடக்கம்.

🎯 கைலாயத்தில் நடைபெற்ற சிவன் பார்வதி திருமணக் காட்சியை அகத்தியருக்கு நாகையிலும் இறைவன் காட்டியருளினார். மதுரையில் சிவபெருமான் சுந்தரேஸ்வரர் ஆக எழுந்தருளி மீனாட்சி அம்மனை #திருமணம் செய்து அருள்புரிகிறார்.

🎯 அம்பிகையின் 64 #சக்தி பீடங்களில் மிக முக்கியமான ஐந்து ஆட்சி பீடங்களில் இவ்விரு ஊர்களும் அடக்கம்,

🎯 இவ்விரு ஊர்களில் சிவஸ்தலம் முதன்மையாக உள்ளபோதிலும் அம்பிகையின் பெயராலேயே, நாகை நீலாயதாட்சி #அம்மன்_கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என அழைக்கபடுகிறது.

🎯 நாகையில் #நீலாயதாட்சி அம்மன் நித்ய கன்னியாக வீற்றிருந்து, நீலநிற கடல் போன்ற பரந்த பார்வையால் தன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள், மதுரையில் #மீனாட்சி அம்மன் நித்ய சுமங்கலியாக வீற்றிருந்து மீன் போன்ற விழிகளால் பக்தர்களை குழந்தையாக காத்து அருள்கிறாள்.

🎯 இவ்விரு தலங்களிலும் அன்னை ஸ்ரீ ராஜ #சியாமளா தேவியாகவே போற்றப்படுகின்றனர். மதுரையில் மீனாட்சி அம்மன் மரகத பச்சை நிறத்திலும் , நாகையில் நீலம் கலந்த பச்சை நிறத்திலும் ராஜ மாதங்கியாக காட்சி தருகின்றனர்.

🎯 இரு தலங்களிலும் #ஆடி மாதம் அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறும்.

🎯 நாகையில் நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு அம்பிகை பூப்பெய்தல் #பூரம்_கழித்தல் விழாவாகவும். மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு ஆடி #முளைக்கொட்டு உற்சவத்தில் பூரம் அன்று ருதுமங்கள ஸ்னானம், ஏற்றி இறக்கும் வைபவம் நடைபெறும்.

🎯 சூரசம்காரம் உடன் தொடர்புடையதாக #முருகப்பெருமான் நாகை சிக்கலில் #வேல் வாங்கி சம்காரம் செய்து, மதுரை திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை #மணம் முடிக்கிறார்.

🎯 திருமால் #அழகர் ஆக சுந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் மதுரையிலும், #அழகியார் ஆக சௌந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் நாகையில் அருள்புரிகிறார்.

#மீள்பதிவு FB\NagaiKaronam




No comments:

Post a Comment