14 Aug 2021

07.101 பொன்னாம் இதழி விரைமத்தம்

 இன்று #ஆடி_சுவாதி 🌷 #சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை 🙏( 14/08/2021)


சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டில் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ள இப்பதிகம் நாகை காரோணம் திருத்தலத்தில் இயற்றி உள்ளதாக அமைந்துள்ளது. Shaivam.Org


#பொன்னாம்_இதழி_விரைமத்தம்

(07.101 ஏழாம் திருமுறை) பண் : காந்தாரம் 


பொன்னாம் இதழி விரைமத்தம் பொங்குகங்கைப் புரிசடைமேல் முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்னே துன்னா மயூரம் சோலைதொறும் ஆட தூரத் துணைவண்டு தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே.  1 


வரைக்கை வேழம் உரித்தும் அரன்நடமாட்டு ஆனால் மனைதோறும் இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் திரைக்கை காட்டும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  2 


புல்லும் பெறுமே விடை புனரச் சடைமேல் ஒரு பெண் புக வைத்தீர் இல்லம் தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றைமுகம் மோதிரம் காட்ட செல்லும் புறவின் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  3 


மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி பூண்தார் பொறி ஆடு அரவு ஆமை புரம்மூன்று எரித்தீர் பொருள்ஆக தூண்டா விளக்கு மணிமாட வீதிதோறும் சுடர்உய்க்க சேண்தார் புரிசைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  4 


ஒருவர்க்கு ஒருவர்அரிது ஆகில் உடை வெண்தலை கொண்டு ஊர்ஊரன் இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் தெருவில் சிந்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  5 


தோடை உடுத்த காது உடையீர் தோலை உடுத்துச் சோம்பாதே ஆடை உடுத்துக் கண்டக்கால் அழகிது அன்றே அரிது அன்று ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம் சேடை உடுத்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  6 


கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இக் காலம் விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணிமாளிகைக் குழாம் இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  7 


பள்ளம் பாறும் நறும் புனலைச் சூடி பெண் ஓர் பாகமா வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத் தொள்ளும் வேலைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  8 


மத்தம் கவரும் மலர்க் கொன்றைமாலைமேல் மால் ஆனாளை உய்த்து அங்கு அவரும் உரை செய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர் சித்தம் கவரும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  9 


மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் இறையில் எரித்தீர் ஏழ் உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்க மலர்ச் சிறை வண்டு அறையும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  10 


தேரார் வீதித் தென்நாகைத் திருக் காரோணத்து இறையானைச் சீரார் மாடத் திருநாவலூர்க் கோன் சிறந்த வன் தொண்டன் ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சோடு அஞ்சும் அறிவார்கள் வாரார் முலையாள் உமை கணவன் மதிக்க இருப்பார் வான் அகத்தே.  11




12 Aug 2021

நீலலோசனி ❤️ மீனலோசனி


கருந்தடங்கண்ணி அங்கயற்கண்ணி

🎯 #நாகை மற்றும் #மதுரை ஸ்தலங்களுக்கு இடையேயான சில ஒப்பீடுகள் ..

🎯 சிவபெருமானின் நாகம் வலம் செய்து உண்டான நகரம் மதுரை என்பதால் #திருஆலவாய் (ஆலம் என்றால் நாகம்) என்ற பெயர் உண்டு. நாகர்கள் வசித்து சிவபூஜை செய்த நகரம் #நாகப்பட்டினம் என அழைக்கப்படுகிறது.

🎯 மதுரையில் சொக்கநாதப் பெருமான் 64 #திருவிளையாடல்கள் நிகழ்த்தியது போல், நாகை உள்ளிட்ட #சப்தவிடங்கர் தலங்களில் தியாகராஜப் பெருமான் 360 திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார்.

🎯 மதுரையில் #சுந்தரேஸ்வரர் ஆகவும் நாகையில் #சுந்தர_விடங்கர் ஆகவும் சுவாமி அருளாட்சி புரிகிறார்.

🎯 #பதஞ்சலி, #வியாக்ரபாதர் முனிவர்களுக்கு #நடராஜர் திருநடனம் காட்டி அருளிய பல தலங்களில் இவூர்களும் அடக்கம்.

🎯 கைலாயத்தில் நடைபெற்ற சிவன் பார்வதி திருமணக் காட்சியை அகத்தியருக்கு நாகையிலும் இறைவன் காட்டியருளினார். மதுரையில் சிவபெருமான் சுந்தரேஸ்வரர் ஆக எழுந்தருளி மீனாட்சி அம்மனை #திருமணம் செய்து அருள்புரிகிறார்.

🎯 அம்பிகையின் 64 #சக்தி பீடங்களில் மிக முக்கியமான ஐந்து ஆட்சி பீடங்களில் இவ்விரு ஊர்களும் அடக்கம்,

🎯 இவ்விரு ஊர்களில் சிவஸ்தலம் முதன்மையாக உள்ளபோதிலும் அம்பிகையின் பெயராலேயே, நாகை நீலாயதாட்சி #அம்மன்_கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என அழைக்கபடுகிறது.

🎯 நாகையில் #நீலாயதாட்சி அம்மன் நித்ய கன்னியாக வீற்றிருந்து, நீலநிற கடல் போன்ற பரந்த பார்வையால் தன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள், மதுரையில் #மீனாட்சி அம்மன் நித்ய சுமங்கலியாக வீற்றிருந்து மீன் போன்ற விழிகளால் பக்தர்களை குழந்தையாக காத்து அருள்கிறாள்.

🎯 இவ்விரு தலங்களிலும் அன்னை ஸ்ரீ ராஜ #சியாமளா தேவியாகவே போற்றப்படுகின்றனர். மதுரையில் மீனாட்சி அம்மன் மரகத பச்சை நிறத்திலும் , நாகையில் நீலம் கலந்த பச்சை நிறத்திலும் ராஜ மாதங்கியாக காட்சி தருகின்றனர்.

🎯 இரு தலங்களிலும் #ஆடி மாதம் அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறும்.

🎯 நாகையில் நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு அம்பிகை பூப்பெய்தல் #பூரம்_கழித்தல் விழாவாகவும். மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு ஆடி #முளைக்கொட்டு உற்சவத்தில் பூரம் அன்று ருதுமங்கள ஸ்னானம், ஏற்றி இறக்கும் வைபவம் நடைபெறும்.

🎯 சூரசம்காரம் உடன் தொடர்புடையதாக #முருகப்பெருமான் நாகை சிக்கலில் #வேல் வாங்கி சம்காரம் செய்து, மதுரை திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை #மணம் முடிக்கிறார்.

🎯 திருமால் #அழகர் ஆக சுந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் மதுரையிலும், #அழகியார் ஆக சௌந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் நாகையில் அருள்புரிகிறார்.

#மீள்பதிவு FB\NagaiKaronam