30 Dec 2021

திருமுறை வைப்பு பாடல்கள்

 சிவ ராஜதானி ஷேத்திரம் என்று போற்றப்படக் கூடிய நாகை காரோணம் திருத்தம் தேவார மூவராலும் (எட்டு பதிகங்கள்) பாடப்பெற்ற சிறப்புடையது. மேலும் சைவத் திருமுறைகளில் இத்திருத்தலம் பற்றிய பாடல்கள் பல அமையப் பெற்றுள்ளன அவை முறையே,


திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு இரண்டு பதிகங்கள்

திருநாவுக்கரசர் தேவாரம் நான்கு பதிகங்கள்

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டு இரண்டு பதிகங்கள் (அவற்றில் ஒன்று பிற்சேர்க்கையாக கிடைக்கப்பெற்றது)

மற்றும் "காரோணம்" என்று பல்வேறு தலங்களின் திருமுறை பதிகங்களில் குறிப்பிடப்பட்டு அவை வைப்பு பாடல்களாகவும் அமைந்துள்ளன,

அவற்றுள் மூன்று காரோணத் தலங்களில் ஒன்றான குடந்தைக் காரோணம் திருத்தலம் திருஞான சம்பந்தரால் நேரடியாக பாடப்பட்டுள்ளது. (தி 01.072)

மேலும் திருநாவுக்கரசர்  நாகைக் காரோணரை பல தலங்களின் பதிகங்களில் நினைவு கூறி உள்ளார். அவைகளாவன,

{ தி - திருமுறை, ப- பதிகம், பா - பாடல் }

தி06.ப002.பா06 (மங்குல் மதிதவழும் - தலம் : கோயில் தில்லை )

காதார் குழையினர் கட்டங் கத்தர்
    கயிலாய மாமலையார் #காரோணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
    முதலும் இறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ அன்று
    வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாள்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

--------------------------------------------------------------------------

தி06.ப007.பா08 (செல்வப் புனற்கெடில - தலம் : திருவதிகை வீரட்டானம் )

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந் திண்டீச் சரமுந் திருப்புகலூர் எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச் சரமுநல் லேமங்கூடல் கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங் குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங் கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங் #காரோணந் தம்முடைய காப்புக்களே

-------------------------------------------------------------------------

தி06.ப010.பா10 (நோதங்க மில்லாதார் -
திருப்பந்தணைநல்லூர்)

கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
#காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலை யின்மே லிருந்து
வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

-------------------------------------------------------------------------

06.013.04 ( கொடிமாட நீடெருவு - திருப்புறம்பயம் )

பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப் பனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர் நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில் கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங் #கடனாகைக் #காரோணங் கைவிட் டிந்நாள் பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

-------------------------------------------------------------------------

06.017.08 (ஆறு சடைக்கணிவர் - திரு இடைமருதூர் )

காவார் சடைமுடியர் #காரோணத்தர் கயிலாய மன்னினார் பன்னு மின்சொற் பாவார் பொருளாளர் வாளார் கண்ணி பயிலுந் திருவுருவம் பாக மேயார் பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர் புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

-------------------------------------------------------------------------

06.028.09 ( நீற்றினையும் - திரு ஆரூர் )

பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும் பிறவி யிறவி இலாதார் போலும் முண்டத்து முக்கண் ணுடையார் போலும் முழுநீறு பூசு முதல்வர் போலுங் கண்டத் திறையே கறுத்தார் போலுங் காளத்தி #காரோணம் மேயார் போலும் அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும் அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

-------------------------------------------------------------------------

06.033.08 ( பொருங்கைமதக் - ஆரூர் அரநெறி )

காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக் #காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப் பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப் பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச் சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ் சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 

-------------------------------------------------------------------------

06.037.09 ( ஆரார் திரிபுரங்கள் - திருவையாறு )

கச்சியே கம்பனே யென்றேன் நானே
    கயிலாயா #காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
    நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
    உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின்றேனே

-------------------------------------------------------------------------

06.051.01 - ( திருவீழிமிழலை திருத்தாண்டகம் )

கயிலாய மலையுள்ளார் #காரோணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார் மயிலாடு துறையுளார் மாகா ளத்தார் வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த அயில்வாய சூலமுங் காபா லமும் அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி வெயிலாய சோதி விளங்கு நீற்றார் வீழி மிழலையே மேவி னாரே. 

-------------------------------------------------------------------------

06.054.06 ( ஆண்டானை - திரு புள்ளிருக்குவேளூர் )

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக் கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக் #கடல்நாகைக் #காரோணங் கருதி னானை இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

-------------------------------------------------------------------------

06.62.06 ( எத்தாயர் எத்தந்தை - திருவானைக்கா )

உரையாரும் புகழானே யொற்றி யூராய்
    கச்சியே கம்பனே #காரோணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
    மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
    திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே

-------------------------------------------------------------------------

06.070.07 (  தில்லைச் சிற்றம்பலமுஞ் - க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகம், பொதுப்பதிகம் )

வீழி மிழலைவெண் காடு வேங்கூர் வேதி குடிவிசய மங்கை வியலூர் ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை ஆலங் காடும் அரதைப் பெரும் பாழி பழனம்பனந் தாள்பா தாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண் காழி #கடல்நாகைக் #காரோ ணத்துங் கயிலாய நாதனையே காண லாமே.

-------------------------------------------------------------------------

06.082.07 ( வானத் திளமதியும் - திரு சாய்க்காடு )

கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங் #காரோணத் தென்று மிருப்பார் போலும் இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும் ஏகம்பம் மேவி யிருந்தார் போலும் படியொருவ ரில்லாப் படியார் போலும் பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ் செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.


-------------------------------------------------------------------------

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டு
07.031.04 ( முந்தையூர் முதுகுன்றங் - திரு இடையாறு )

கச்சையூர் காவங் கழுக்குன்றங் #காரோணம் பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர் கச்சியூர் கச்சி #சிக்கல் நெய்த்தானம் மிழலை இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே

-------------------------------------------------------------------------

பதினோராம் திருமுறை பதிகங்கள்

கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி (11.022.66)

பாடல் எண் : 66

எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும் எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக் கண்டத்தான் நால்வேதன் #காரோணத் தெம்மானைக் கண்டத்தான் நெஞ்சேகாக் கை

-------------------------------------------------------------------------

பரணதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி (11.023.35)

பாடல் எண் : 35

கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயான் கடநாகம்
மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய்
மாளவிரித் தாடுவான் வந்து .

-------------------------------------------------------------------------

மேலும் பன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர் (பெரிய) புராணத்தில் அதிபத்த நாயனார் வரலாற்றில் இத்திருத்தலம் பற்றிய பாடல்கள் அமைந்துள்ளன.

தொகுப்பிற்கு உறுதுணையாக இருந்த இணையதளங்கள் shaivam.org மற்றும் thevaaram.org

காரோணா .. தியாகேசா
     திருச்சிற்றம்பலம்