8 Dec 2020

தியாகராஜர் கீர்த்தனை 1 (கர்மமே)


தியாகராஜ கிருதி - கர்மமே ப3லவந்த - ராகம் ஸாவேரி - Karmame Balavanta - Raga Saveri - Nagappattinam Kshetra

பல்லவி
கர்மமே 1ப3லவந்தமாயா தல்லி
2காயாரோஹண ஜாயா

அனுபல்லவி
நிர்மலமகு3 நாக3 புரமுன நெலகொன்ன
3நீலாயதாக்ஷி ஸகல லோக ஸாக்ஷி (க)

சரணம் 1
த4ரனு த4னிகுல கோரினா நா
பரிதாபமுல் தீர்ப லேரைரியனி
ஸரகு3ன நே ப3யலு-தே3ரி வச்சி
பரம பாவனி நீ ஸன்னிதி4 4ஜேரினா (க)

சரணம் 2
5வாரிதி4 மதி3 க3ர்விஞ்சியீ
வஸுத4கு தா ரானெஞ்சி நின்னு
ஸாரெகு கனி 6தல வஞ்சியுண்டு3
தீ4ர-தனமு கல்கு3 நினு 7பொட3கா3ஞ்சினா (க)

சரணம் 3
காஸாஸ லேனி நா மதி3கி நீ
8கருணயே த4னமனி பலிகி
நிண்டா3ஸதோ வச்சி ஸன்னிதி4கி நிஜ
தா3ஸுடை3ன ஸ்ரீ த்யாக3ராஜுனிகி (க)


பதம் பிரித்தல் - பொருள்

பல்லவி
கர்மமே/ ப3லவந்தமு/-ஆயா/ தல்லி/
ஊழ்வினையே/ வலுக்கட்டாயம்/ ஆனதா/ தாயே/

காயா-ஆரோஹண/ ஜாயா/
காயாரோகணர்/ இல்லாளே/

அனுபல்லவி
நிர்மலமகு3/ நாக3/ புரமுன/ நெலகொன்ன/
தூய்மையான/ நாக/ புரத்தில்/ நிலைபெற்ற/

நீல-ஆயத-அக்ஷி/ ஸகல/ லோக/ ஸாக்ஷி/ (க)
கருந்தடங்கண்ணீ/ அனைத்து/ உலக/ சாட்சியே/

சரணம் 1
த4ரனு/ த4னிகுல/ கோரினா/ நா/
புவியில்/ செல்வந்தரை/ கோரினாலும்/ எனது/

பரிதாபமுல்/ தீர்ப/ லேரைரி/-அனி/
பரிதாபத்தினை/ தீர்க்க/ இயலார்/ என/

ஸரகு3ன/ நே/ ப3யலு-தே3ரி/ வச்சி/
உடனே/ நான்/ புறப்பட்டு/ வந்து/

பரம/ பாவனி/ நீ/ ஸன்னிதி4/ ஜேரினா/ (க)
முற்றிலும்/ புனிதமானவளே/ உனது/ சன்னிதி/ யடைந்தாலும்/ ஊழ்வினையே...

சரணம் 2
வாரிதி4/ மதி3/ க3ர்விஞ்சி/-ஈ/
வாரிதியோன்/ மதி/ செருக்குற்று/ இந்த/

வஸுத4கு/ தா/ ரானு/-எஞ்சி/ நின்னு/
நிலத்துள்/ தான்/ புக/ எண்ணி/ உன்னை/

ஸாரெகு/ கனி/ தல/ வஞ்சி/-உண்டு3/
எப்போழ்தும்/ கண்டு/ தலை/ தாழ்த்தி/ யிருக்கும்/

தீ4ர-தனமு/ கல்கு3/ நினு/ பொட3கா3ஞ்சினா/ (க)
தீரத்தனம்/ உடைத்த/ உன்னை/ தரிசித்தாலும்/ ஊழ்வினையே...

சரணம் 3
காஸு-ஆஸ/ லேனி/ நா/ மதி3கி/ நீ/
பணத்தாசை/ இல்லாத/ எனது/ உள்ளத்திற்கு/ உனது/

கருணயே/ த4னமு/-அனி/ பலிகி/
கருணையே/ செல்வம்/ என்று/ உரைத்து/

நிண்டு3/-ஆஸதோ/ வச்சி/ ஸன்னிதி4கி/ நிஜ/
நிரம்ப/ ஆசையுடன்/ வந்து/ சன்னிதிக்கு/ உண்மை/

தா3ஸுடை3ன/ ஸ்ரீ த்யாக3ராஜுனிகி/ (க)
தொண்டனாகிய/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ ஊழ்வினையே...



ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

தூய்மையான நாகபுரத்தில் நிலைபெற்ற
கருந்தடங்கண்ணீ! அனைத்துலக சாட்சியே!
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

1. புவியில், செல்வந்தரைக் கோரினாலும், எனது
பரிதாபத்தினைத் தீர்க்க இயலாரென,
உடனே, நான் புறப்பட்டு வந்து,
முற்றிலும் புனிதமானவளே! உனது சன்னிதி யடைந்தாலும்,
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

2. வாரிதியோன், மதி செருக்குற்று, இந்த
நிலத்துள் தான் புக எண்ணி, உன்னை
எப்போழ்தும் கண்டு, தலை தாழ்த்தியிருக்கும்,
தீரத்தனமுடைத்த, உன்னை தரிசித்தாலும்,
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணேசுவரர் இல்லாளே!

3. பணத்தாசை இல்லாத எனதுள்ளத்திற்கு, உனது
கருணையே செல்வமென்று உரைத்து,
நிரம்ப ஆசையுடன் வந்து சன்னிதிக்கு, உண்மைத்
தொண்டனாகிய இத்தியாகராசனுக்கு
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

காயாரோகணர் - திருநாகைக்காரோணம் - நாகப்பட்டினம்
நாகபுரம் - நாகப்பட்டினம்
கருந்தடங்கண்ணி - நீலாயதாட்சி
வாரிதியோன் - கடல்

No comments:

Post a Comment