29 Nov 2024

அழகுமுத்துப்புலவர் முருகனோடு ஐக்கியமகிய சித்திரைச் சதயத் திருநாள் nagai kumaran kovil alagumuthu pulavar

 


நாகப்பட்டினம் திருநகரில் தமிழ் கடவுளாம் முருகப்பெருமானுக்கு என எழுப்பப்பட்ட தனிப்பெரும் கோட்டமே குமர கோயிலாகும். 

இக்கோயிலின் மெய்க்காவலராக பணியில் இருந்த அழகுமுத்து என்பவர், முருகன் மீது அதீத பக்தி கொண்டவர். சிறுவயது முதலே, நோய் வாய்ப்பட்டிருந்த, அழகுமுத்து, கல்வி கற்கவில்லை. ஆனால், கல்வியின் பயன் நல்லொழுக்கம் என்பதற்கு ஏற்ப, அதில் தலைசிறந்து விளங்கினார். சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை, மனதிற்குள்ளாகவே உருவேற்றி வந்தார். இவர் இரவு வழிபாடு முடிந்து, பிரசாதம் பெற்று, உண்டபிறகே வீடு திரும்புவார். ஒருநாள், குளிர் மிகுதியாலும், நோய் தொல்லையாலும், பசியின் கொடுமையாலும், மனம் நொந்த அழகுமுத்து, வாகனங்கள் வைக்கும் இடத்தில் படுத்து உறங்கி விட்டார்.

இரவு பூஜை முடிந்து, பிரசாதம் கொடுப்பதற்காக அழகுமுத்துவை தேடிய குருக்கள், அவரை காணாமல், வீட்டிற்கு போய் விட்டதாக எண்ணி, கோவிலைப் பூட்டி கிளம்பி விட்டனர்.

நள்ளிரவு தாண்டியது. விழித்தெழுந்தார், அழகுமுத்து. நடந்ததைப் புரிந்து கொண்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. மறுபடியும் படுத்தவர், துாங்கி விட்டார்.

சற்று நேரத்தில், மடப்பள்ளி பணியாளர் வடிவில், பிரசாத தட்டோடு வந்து, அழகுமுத்துவை எழுப்பி, அவருக்கு உணவளித்தார், முருகப்பெருமான்.

ஆர்வத்தோடு அதை உண்ட அழகுமுத்து, மறுபடியும் படுத்து உறங்கி விட்டார்.

 அவரின் கனவில் காட்சியளித்த, முருகன், 'அன்பனே, அழகுமுத்து... எம் மீது பாடல்கள் பாடுவாயாக...' என்று உத்தரவிட்டார்.

'ஐயா, ஆறுமுகா... படிப்பறிவு இல்லாத அடியேன், உன்னை எப்படி பாடுவது...' என, தழு தழுத்தார்.

'பாடுவாய்...' என்று அருளியபடி மறைந்தார், முருகப்பெருமான்.

கனவு கலைந்தது. அழகுமுத்துவுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவரை அறியாமலே பாடத் துவங்கினார். இதற்குள் பொழுது விடிந்தது.

கோவில் கதவுகளைத் திறந்து, உள்ளே வந்த குருக்கள் முதலானோர், அழகுமுத்துவிடம் விசாரித்து, நடந்ததை அறிந்து கொண்டனர். நோய் நீங்கி, பளபளத்த திருமேனியோடு பைந்தமிழில் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த அழகுமுத்துவுக்கு, 'அழகு முத்து புலவர்' என, பெயர் சூட்டினர்.

அதன்பின், நாகையை விட்டுப் புறப்பட்ட, அழகுமுத்து, சிவத்தல யாத்திரை மேற்கொண்டார்.

காசி சென்று திரும்பியவர், சீர்காழியில் ஒரு திருமடத்தில் தங்கியிருந்தார். #சித்திரை சதயத் திருநாளன்று, தன் உடம்பை விட்டு, ஆறுமுகன் திருவடிகளை அடைந்தார்.

அழகுமுத்து, தன் உடம்பை உகுத்த அதே வேளையில், நாகப்பட்டினம், தெற்கு தெரு, மெய்கண்ட வேலாயுதர் கோவிலில், மாலை, வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அங்கே கருவறையில் நுழைந்தார், அழகுமுத்து. கந்தன் திருவடிகளில் கலந்து மறைந்தார்; அனைவரும் திகைத்தனர்.

சன்னிதியில் அழகுமுத்து புகுந்து மறைந்த அதேவேளையில், சீர்காழியில் சித்தி அடைந்ததாக தகவல் கிடைத்தது.

தலைசிறந்த சிவன் அடியார்களான அறுபத்த மூன்று நாயன்மார்களைப் போலவே, சேய்த் தொண்டர்கள் என்றழைக்கப்படும் எழுபத்து எட்டு முருக பக்தர்கள் உள்ளனர். அகத்தியர், அவ்வையார், அருணகிரியார் என்று தொடரும் அந்த வரிசையில் உள்ளோருள் ஒருவர்தான். இந்த 'அழகு முத்து நயனார்' 

“சுழறும் கடல் நாகை மெய்கண்ட வேலன் கழல் வணங்கி 

விழவயர் ஆலய மெய்க்காவல் தொண்டு மிகப் புரிந்த

சூழகன் பெயரால் சதகம் திறப்புகழ் கூறி உய்ந்த

அழகு முத்து என்னும் ஒரு குணக்குன்று என் அகத்துற்றதே"

என்று புலவர் அழகு முத்துவைப் புகழ்கிறது சேய்த் தொண்டர் திருவந்தாதி

இத்தகைய சிறப்பு வாய்ந்த அழகுமுத்து புலவர் பற்றியும்,  இவர் முருகன் மீது இயற்றிய "மெய்கண்ட வேலாயுத சதகம்" மற்றும் "திறப்புகழ்"  நூல் பற்றியும் அனேகமானவர்கள் அறிந்திருக்கவில்லை.  அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் போன்ற பல சந்த பாக்கள் நிறைந்த இந்நூலினை பொருளுரையுடன் மீண்டும் பதிப்பித்து அவற்றிற்கு இசை வடிவம் பெற வேண்டும் என்பது விண்ணப்பம். 

#முருகா_சரணம் 🙏



அப்பர் மடம் / நடராஜர் மடம்

திருநாவுக்கரசர் நாகையம் பதியில் காரோண பெருமானை பதிகம் பாடி உழவார பணி செய்ததன் நினைவாக அமைந்துள்ள அப்பர் மடம் தற்போது நடராஜர் மடம் என்ற பெயரில் நாகை முதலாம் கிழக்கு கடற்கரை சாலை அடுத்த ஆரியநாட்டு தெருவில் அமைந்துள்ளது.  





ஆவணி மூலம்

நாகப்பட்டினமான சோழகுலவல்லிப்பட்டினத்து ஊரார் மன்னன் சுந்தரபாண்டியனின் பிறந்தநட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் இறைவன்

வீதி உலாச் சென்று தீர்த்தமாடவும், வழிபாட்டுச் செலவுகளுக்காகவும்

சன்னமங்கலத்தில் 14 1/2 நிலம் கொடுத்தமையைக் குறிக்கிறது.


ஆவணி மூலம் முன்னிட்டு ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் கல்யாண சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் இவ்விழாவை குறிப்பிடும் விதமாக இக்கோயிலில் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது சிறப்பு செய்தி ஆகும்.




மாசிமக திருவிழா

 பழந்தமிழர் கொண்டாடிய திருவிழாக்களில் இன்றளவும் விடாமல் பல நூறு ஆண்டுகளாக சீரும் சிறப்புமாகக் கொண்டாப்படும் விழா மாசிமகம் திருவிழாவாகும். மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரம் சிம்மராசிக்குரியது. மாசிமகம் அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்மராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் கோவில்களில் தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தநாளாக #கடலாடும்விழா எனும் சிறப்புப் பெயருடன் மாசிமக பெருவிழா கொண்டாடப்படுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசிமகம், குடந்தையில் பெரும் திரளான மக்கள் கலந்துக் கொள்ளும் #மகாமகம் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதும், வடநாட்டில் கும்பமேளா எனும் பெயரில் சிறப்பாக. கொண்டாடப்படுவதும் அனைவரும் அறிந்ததே...

இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருவிழாவான மாசிமகம் தமிழர்களால் சீரும் சிறப்புமாகக் சங்க காலம் முதலே கொண்டாடப்பட்டதற்கு  நமக்கு புறநானூறு, மதுரைக் காஞ்சி போன்ற சங்க இலக்கியங்களில் நிறைய சான்றுகள் கிடைக்கின்றன. அதன்பின் பல்வவர் காலத்தில் திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுவது மூலம் மாசிமக விழா அப்போதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளதை காண்கிறோம். அதன் பின் பிற்காலச் சோழர்கள் எழுச்சிப் பெற்ற பின் மாசிமகம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டதற்கு நிறைய கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. மாசிமக விழா என்று ஒரு நாள் மட்டுமல்லாமல் 6 முதல் 10 நாட்கள் வரை பல கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதற்கு நமக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. 

முதலில் நாம் காண இருப்பது நாகப்பட்டினம் திருக்காரோணமுடையார் கோவிலில் உள்ள முதலாம் ராஜேந்திர சோழர் காலக் கல்வெட்டு! நாகப்பட்டினத்து ஊர்சபையினர் மாசிமக திருவிழா நடக்கும் ஆறு நாட்களிலும் இறைவனுக்கு திருவிளக்கெரிக்கவும், திருவமுது படைக்கவும் தானமாக இரண்டே ஏழுமா அளவுள்ள நிலத்தை வழங்கியதை குறிக்கும் சிறப்பானக் கல்வெட்டு இது. நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்படுகையில் சேனாமுகத் துர்க்கையார், ஆரியச்சாலை துர்க்கையார், மடிகைத் துர்க்கையார் என்ற பல துர்க்கை கோவில் தேவதான நிலங்களும், அந்திரி சேந்தமான செம்பியன் மாதேவி தலைக்கோலி, வணிகன் கலியன் மாவேன் ஆன ராஜராஜ தோன்றி சிலேட்டி, வெங்கடவன் ஆதித்தன் போன்றோரின் நிலங்களும் தானம் தந்த நிலத்தின் எல்லைகளாகக் குறிக்கப்படுகின்றன. இதிலிருந்து நாகை ஊர்மக்கள் ஆறு தினங்கள் சோழர் காலத்தில் சீரும் சிறப்புமாக மாசிமக பெருவிழாவை கொண்டாடியதை அறியலாம்...!

#திருக்காரோணமுடையார் 

#நீலாயதாட்சி_அம்மன்_திருக்கோயில்

#ராஜேந்திரசோழர்

#நாகப்பட்டினம்

#சோழமண்டலவரலாற்றுத்தேடல்குழு




நாகை நாகநாதர் திருக்கோயில் nagai naganathar temple

 



குழந்தைப்பேறு இல்லாது தவித்த ஆதிசேஷன் ஓர் முனிவரின் அறிவுறுத்தலின்படி மகா சிவராத்திரி நன்னாளில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய எண்ணினான் .

🌷 அதன்படி முதல் காலத்தில் கும்பகோணம் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகநாதசுவாமி திருக்கோயிலிலும், இரண்டாம் காலம் திருநாகேஸ்வரதிலும், மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரம் திருத்தலத்திலும், நிறைவாக நான்காம் காலத்தில்  நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமியை வழிபட்டு பின் தனியாக லிங்கப் பிரதிஷ்டை, தீர்த்தம் அமைத்து வழிபட்டு  வந்தான்.

🌷 இறைவனும் மனமிரங்கி ஆதிசேஷனுக்கு காட்சியளித்து பிள்ளை வரமளித்தார் , நாகர்களின் குலம் செழிக்க காரணமான இந்த ஊருக்கு அவர்களது பெயராலே வழங்கலாயிற்று.

🌷 இறைவன் அருளால் ஆதிஷேசன் ஓர் பெண் குழந்தையை பெற்றான், ஆனால் அக்குழந்தை வளர்ந்து பருவம் எய்திய போது மூன்று தனங்களுடன் இருப்பதை அறிந்து மனவேதனை கொண்டு இறைவனிடம் முறையிட்டான். அப்போது "அசரீரியாக" ஆதிசேஷனே வருந்தாதே அப்பெண்ணிற்கு உரிய மணாளனே அவள் காணும் பொழுது மூன்றாவது ஸ்தனம் மறையும் என ஒலித்தது.

🌷 ஆதிசேஷனின் மகளான நாக கன்னிகை  காயாரோகண சுவாமியையும், நீலாயதாட்சி அம்மனையும் நாள்தோறும் வழிபட்டு வந்தாள். அவ்வேளையில் ஒரு நாள் தேவ தீர்த்தக்கரையில் சோழர் குலத்தில் உதித்த அரசகுமாரன் சாலிசுகனை கண்டபோது அவள் மூன்றாவது ஸ்தனம் மறையவே இவனே தனது மணாளன் என உணர்ந்து தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். பிலாத்துவாரம் வழியாக நாகலோகம் அடைந்த சாலிசுகனை ஆதிசேஷன் வரவேற்று தனது மகளுக்கு மணமுடித்துக் கொடுத்தான் என்பது தலபுராணம்.

#நாகை_காரோணம்

அருள்மிகு அழகியநாதர் திருக்கோயில் alagiyanathar sivan kovil

 

திருமால் சிவபெருமானை வழிபட்டு தன் அழகை மீண்டும் திரும்பப் பெற்ற இந்த அழகிய நாதர் திருக்கோயில், சிவ ராஜதானி என போற்றப்படும் நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களில் ஒன்றாகும். 

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் திருக்கோயில் கருங்கல் திருப்பணிகள் ஆன ஒரு அழகிய கற்றளி ஆகும். ஆலய நுழைவாயில் மொட்டை கோபுரத்தில் விநாயகர், முருகர் ரிஷபத்தின் மீது அம்மையப்பர், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் அவரவர் வாகனத்தில் அமைந்த படி சுதை சிற்பம் அமைந்துள்ளது. மேலும் அதன் பின்புறத்தில் மகாவிஷ்ணு சிவபூஜை செய்யும் காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை கடந்து நந்தியம் பெருமானே வணங்கி நேராக உள்ளே சென்றால் சற்று உயரமான கருவறையில் நீண்ட பானத்துடன் லிங்கத் திருமேனியாக அழகிய நாதர் காட்சி கொடுக்கிறார். அம்பிகை தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் நான்கு திருக்கரங்களுடன் "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி" என்றாற் போல் அழகம்மை எனும் சௌந்தரவல்லி ஆக அருள்பாலிக்கிறாள்.

தல வரலாறு 

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் பெற திருப்பாற்கடலை கடையும் பொழுது வாசுகி நாகத்தி டமிருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டு மகாவிஷ்ணுவின் உடல் கரிய நிறமாக மாறி ரோகம் ஏற்பட்டது. மீண்டும் தனது அழகை பெற திருமால் நாகைக்கு வந்து காயாரோகண சுவாமியை வணங்கி பின் தனியாக லிங்க பிரதிஷ்டை செய்து அமிர்த புஷ்கரணி என்ற தீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டு வந்தார். 

சிவபெருமானும் திருமாலுக்கு காட்சியளித்து ரோகம் நீக்கி, கரிய நிறத்திலும் நீ அழகு பெறுவாய் என வரமளித்தார். தனது அழகை மீண்டும் பெற்ற திருமால் நீலமேகப்பெருமாள்,(சௌந்தர்ராஜன்) என்ற திருநாமத்துடன், இக்கோயிலின் தென்மேற்குத் திசையில் கோயில் கொண்டுள்ளார். 

 இதன் காரணமாக தான் நாகை பெரிய கோயில் காயாரோகணேஸ்வரர் 

சன்னதியில் பிரதோஷ காலங்களில் திருமால் மோகினியாக புறப்பாடாகிறார். சிவாலயங்களில் பிரதோஷ புறப்பாட்டின் போது திருமாலும் புறப்படுவது நாகப்பட்டினம் திருத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. திருமாலின் மோகினி வடிவத்தை பிரதோஷ காலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் கருவறையிலிருந்து சிவபெருமானை ஆத்மார்த்த பூஜை செய்வதாக ஐதீகம். 

இக்கோயில் நகரின் மையத்தில் 

நான்கு கால் மண்டபத்திலிருந்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.





அருள்மிகு நடுவதீஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் || naduvatheeswarar temple nagapattinam



நாகப்பட்டினம் நகரின் கோயில்களுக்கு  நடுநாயகமாக விளங்குவதால் இக்கோயிலுக்கு நடுவர் கோயில் எனவும், வடமொழியில் மத்தியபுரி என்றும் குறிப்பிடுவர். நாகை பன்னிரு சிவாலயங்களில் ஒன்றாக உள்ள இக்கோயில் தேசிய மேல்நிலைப்பள்ளி பின்புற சாலையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. 

இக் கோயிலுக்கு முன்பாக மத்தியத்தலேச விநாயகர் அருள்பாலிக்கின்றார். கோபுரத்தை கடந்து சென்றால் பலிபீடம் கொடிமரம் ஆகியவற்றுக்கு அடுத்தாற்போல் மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது. கொடிமரத்தின் கீழே பிரம்மா மற்றும் எமன் சிவலிங்க வழிபாடு செய்வது போன்ற தல புராணத்தை குறிக்கும் வகையில் சிற்பம் உள்ளது. 

இங்கு கிழக்கு நோக்கி லிங்கத்திருமேனியாக சிவபெருமான் மத்திய புரீஸ்வரர் மற்றும் நடுவதீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக் கருவறையில் ஒரு நிலவறை உள்ளதாக சொல்லப்படுகிறது. அம்பிகை தெற்கு நோக்கி சௌந்தர நாயகி எனும் திருநாமத்துடன்  அருள்புரிகிறாள்.

தல வரலாறு 

ஊழிக் கால பிரளய அழிவிற்குப் பின், உலகப் படைப்பிற்காக திருமாலின் ஆலோசனைப்படி பிரம்மா இத்தலம் வந்து சிவலிங்க பிரதிஷ்டையும், தீர்த்தமும் அமைத்து வழிபட்டு தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். இந்த பிரம்ம தீர்த்தம் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. 

மேலும்  திருக்கடையூரில் சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்து உயிர்ப்பித்த பின், தனது தவறுக்கான தோஷ நிவர்த்திக்காக எமதர்மன் நாகை வந்து இத்தல ஈசனை தீர்த்தம் அமைத்து வழிபட்டு விமோசனமும், இழந்த பதவியையும் பெற்றான். எனவே இந்த எம தீர்த்தத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து எமவாதனை உள்ளவர்களுக்கு கொடுக்கும் பொழுது மித்ரு பயம் நீங்கி சிவபதவி அடைவார் என நம்பப்படுகிறது.

உயிரின் தொடக்கம் மற்றும் முடிவுக்கான தேவதைகளான பிரம்மா மற்றும் எமன் வழிபட்ட இந்த அற்புதத் தலத்தை தவறாது தரிசனம் செய்து இறைவன் அருள் பெறுக..  




ஸ்ரீ சுந்தர விடங்கர் தியாகராஜப் பெருமான் பிரம்மோற்சவம்

திருநாகைக்காரோணம் ஸ்ரீ சுந்தர விடங்கர் தியாகராஜப் பெருமான் பிரம்மோற்சவம் திருவிழா ..!!


தற்போதைய சூழலும்..

தலபுராண குறிப்புகளும் ..

சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது சேத்திரமாக விளங்கக்கூடிய #நாகை திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் "ரத்தின சிம்மாசன பாரா வாரா தரங்க நடன ஸ்ரீ சுந்தர விடங்கர் தியாகராஜப் பெருமானுக்கு" #வைகாசி விசாகத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெறுவது தற்போதைய வழக்கமாக இருக்கிறது. 

கடந்த 2018 ~ 19 ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்ற பிறகு திருத்தேர் பழுது காரணமாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகள் (2020 - 2021) பெரும் தொற்றின் காரணமாகவும் திருவிழா தடைபட்டது. பின்னர் இவ்வருடம் (2022) திருக்கோயில் திருப்பணிக்காக #பாலஸ்தாபனம் ஆகியதால் விழா ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின்னரே திருவிழா நடைபெறும் சூழலால் திருவிழாவானது மேலும் கடந்து செல்கிறது. 

நிற்க

இவை ஒருபுறமிருக்க.., 

பல (~50) வருடங்கள் கழித்து நமது எதிர்பார்ப்பின் படி  மறுபதிப்பாகிய தல புராணத்தை நோக்கும் போது அதிலிருந்து பல அரிய தகவல்களும், பிரம்மோற்சவம் பற்றிய குறிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றின்படி நாகைக் காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய (சுந்தர) விடங்கருக்கு 

#ஆனி மாதம் #அஸ்தம் நட்சத்திரம் #கொடியேற்றம். அதிலிருந்து பதினெட்டாம் நாளில் அஷ்ட திக்குகளிலும் கொடியேற்றமும், இருபத்தி நான்காம் நாள் #திருத்தேர் விழா, இருபத்தி ஏழாம் நாளில் அமைந்த #உத்திரம் நட்சத்திரம் அன்று #தீர்த்தவாரி என்ற குறிப்புகள் கிடைத்துள்ளன. 

திருக்கோயிலில் தற்போது நடைபெறும் விழா காலத்திற்கும், ஸ்தல புராணத்தில் உள்ள குறிப்புகளுக்கும் மாறுபாடு உள்ளதை முன்பே அறிந்திருந்தும்,  இதுபற்றி ஆலய தலைமை குருக்களிடம்   நேரடியாக கலந்தாலோசிக்கும் வாய்ப்பு தற்போதே கிட்டியது. அதிலிருந்து இந்த கால மாற்றம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்று யூகித்ததிலிருந்து எனது சில கருத்துக்கள் ..,

முந்தைய தலைமுறைக்கு முன் பல காலங்கள் பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்திருந்து, பின்னர் அதற்கான ஏற்பாடுகள் செய்யும் பொழுது மற்ற (திருநள்ளாறு, திருக்காறாயில், திருக்குவளை, திருவாய்மூர்) விடங்கத் தலங்களில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவதால், அத்தோடு ஒத்திசைந்து இங்கும் இவ்வாறு மாறியிருக்கலாம்..!!

(திருவாரூரில் பங்குனி மாதமும் வேதாரணியத்தில் மாசி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது)

இருபத்தி ஏழு நாட்களுக்கு மேலாக நடைபெறும் ஆனி மாத உற்சவம் முந்தைய வைகாசி மாதத்தில் இருந்து துவங்கி இருந்து பின்னர் அவை நாட்கள் குறந்து உற்சவமாக மாறியதால் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய (செய்யுள் வடிவ) திருநாகைக்காரோணம் தலபுராணம், 

~ 1869 ஆம் ஆண்டு புத்தக பதிப்பாகியுள்ளது , அதன் பிறகு செய்யுள் வடிவத்திற்கு குறிப்புரையுடன் 1970 ஆம் ஆண்டு ஆம் திருவாடுதுறை ஆதீனத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இந்த தலபுராண பிரதிகள் சில (ஓரிரு) அன்பர்களிடம் மட்டுமே செல்லரித்து எஞ்சி இருக்கிறது. இதனால் மேற்கூறிய பிரம்மோற்சவம் பற்றிய தலபுராண விவரங்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

( விளக்க உரையுடன் தலபுராணம் மீண்டும் பதிப்பாக வேண்டுமென்ற கோரிக்கையை அடுத்து சென்ற (2021) வருடம் டாக்டர் உ வே சா நூலகத்தின் வாயிலாக நூலானது பதிப்பாகியுள்ளது.)

ஆக..

இவ்வாறாக பல வருடங்கள் கழித்து சுவாமி அருளால் தற்போது வெளியான தலபுராண நூலிலிருந்து பல அரிய செய்திகள்  வெளிப்படுகிறது. உரிய காலத்தில் சுவாமி அனுக்கிரகம் கிடைக்கும்போது அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் என்ற ஆலய சிவாச்சாரியார் கூறிய வாக்கின்படி,  தொடர்ந்து தடைபட்டு வரும் பிரம்மோற்சவம் ஆனது விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற்று வெகு விமர்சையாக ஸ்தல புராண தகவலில் உள்ளபடி நடைபெறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொள்வோம்.

#காரோணா..  #தியாகேசா ..






28 Nov 2024

முத்துசுவாமி தீட்சிதர் கிர்தனை 3

 ஸி1வ காயாரோஹணேஸா1ய - ராக3ம் ருத்3ர ப்ரிய - தாளம் ரூபகம்


பல்லவி

ஸி1வ காயாரோஹணேஸா1ய நமஸ்தே ஸ்ரீ


ஸமஷ்டி சரணம்

ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2த

வரதா3ப4ய கராய

(மத்4யம கால ஸாஹித்யம்)

பு4வன த்ரய மோஹிதாய

போ4க3 மோக்ஷ விதரணாய

நீலாயதாக்ஷீ மனோஹராய

கு3ரு கு3ஹ முதி3தாய


Back

Tamil - Word Division

பல்லவி

ஸி1வ காய-ஆரோஹண-ஈஸா1ய நமஸ்தே ஸ்ரீ


ஸமஷ்டி சரணம்

ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2த

வரத3-அப4ய கராய

பு4வன த்ரய மோஹிதாய

போ4க3 மோக்ஷ விதரணாய

நீல-ஆயத-அக்ஷீ மனோ-ஹராய

கு3ரு கு3ஹ முதி3தாய


pallavi

Siva kAyArOhaNESAya namastE SrI


samashTi caraNam

Siva rAjadhAnI kshEtra sthita

varadAbhaya karAya

(madhyama kAla sAhityam)

bhuvana traya mOhitAya

bhOga mOksha vitaraNAya

nIlAyatAkshI manOharAya

guru guha muditAya


kshEtra - nAgappaTTinam - Siva rAjadhAnI


kAyArOhaNa - The term ‘kAyArOhaNa sthalaM’ means 'a shrine where all beings become one with Lord ziva during the great deluge'. The name kAyArOhaNa is associated with the Lakulisa Pasupata Saiva sect which originated in Gujarat. This sect of saivism is said to have been widespread in Tamilnadu during the days of Mahendravarma Pallavan. There is a temple with the same name at Gujarat - kArvAn - kAyArohaNa svAmi (barODa).

kAyArOhaNa-1; kAyArOhaNa-2


Back

English - Word Division

pallavi

Siva kAya-ArOhaNa-ISAya namastE SrI


samashTi caraNam

Siva rAjadhAnI kshEtra sthita

varada-abhaya karAya

bhuvana traya mOhitAya

bhOga mOksha vitaraNAya

nIla-Ayata-akshI manO-harAya

guru guha muditAya

Meaning

pallavi

namastE                       - Salutations to you,

Siva kAya-ArOhaNa-ISAya       - to (you who are) Shiva known as Kayarohanesha,


samashTi caraNam

Siva rAjadhAnI kshEtra sthita - the one residing in the sacred place Shiva-Rajadhani (Nagapattinam),

varada-abhaya karAya          - the one whose hands gesture assurance of fearlessness and granting of boons,

bhuvana traya mOhitAya       - the one who enchants the three worlds,

bhOga mOksha vitaraNAya       - the one who gives away both enjoyment and liberation,

nIla-Ayata-akshI manO-harAya - the one who captivates the heart of Goddess Nilayatakshi,

guru guha muditAya           - the one who delights Guruguha.


Comments

This Kriti is in the fourth VibhaktiIn Nagapattinam, the lord granted salvation to Pundarika Rishi with his mortal body and so is called Kayarohaneshvara.


சியாமா சாஸ்திரி கீர்த்தனை 2

 பல்லவி

நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3(த3)ம்பா3
நீ த3ய ஸேயவே

அனுபல்லவி
கன்ன தல்லி நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)

சரணம் 1
ஆதி3 ஸ1க்தி ம(ஹே)ஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீ(லா)ய(தா)க்ஷீ ப4வானீ (நன்னு)

சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே12ருனி ராணீ லலி(தா)ம்பி3கே வரதே3 (நன்னு)

சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ நாத3 ரூபிணீ நளி(னா)க்ஷீ (நன்னு)


பல்லவி
என்னைக் காக்கலாகாதா? ஓ பல்லுலகத் தாயே!
நீ கருணை காட்டுவாயம்மா.

அனுபல்லவி
ஈன்ற தாய் நீயே, அம்பா!
எனது முறையீடுகளைக் கேட்கலாகாதா?

சரணம் 1
ஆதி சக்தீ! மகேசுவரீ! கௌமாரீ!
ஆதரிப்பாயம்மா, வெகு விரைவாக. கருந்தடங்கண்ணீ! பவானீ!

சரணம் 2
கோமள, மிருதுவான குரலினளே! கல்யாணீ!
மதியணிவோனின் ராணீ! லலிதாம்பிகையே! வரமருள்பவளே!

சரணம் 3
சியாம கிருஷ்ணனின் சோதரியே! ஓங்காரீ!
சாம்பவீ! ஓ ஈன்றவளே! நாத வடிவினளே! கமலக்கண்ணீ!

கருந்தடங்கண்ணீ - நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர்.
மதியணிவோன் - சிவன்


Word Division

பல்லவி
நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3த்-அம்பா3
நீ த3ய ஸேயவே

அனுபல்லவி
கன்ன தல்லி நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)

சரணம் 1
ஆதி3 ஸ1க்தி மஹா-ஈஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீல-ஆயத-அக்ஷீ ப4வானீ (நன்னு)

சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே12ருனி ராணீ லலிதா-அம்பி3கே வரதே3 (நன்னு)

சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ நாத3 ரூபிணீ நளின-அக்ஷீ (நன்னு)

http://syamakrishnavaibhavam.blogspot.com/2011/06/syama-sastry-kriti-nannu-brova-rada.html?m=1