28 Nov 2024

முத்துசுவாமி தீட்சிதர் கிர்தனை 3

 ஸி1வ காயாரோஹணேஸா1ய - ராக3ம் ருத்3ர ப்ரிய - தாளம் ரூபகம்


பல்லவி

ஸி1வ காயாரோஹணேஸா1ய நமஸ்தே ஸ்ரீ


ஸமஷ்டி சரணம்

ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2த

வரதா3ப4ய கராய

(மத்4யம கால ஸாஹித்யம்)

பு4வன த்ரய மோஹிதாய

போ4க3 மோக்ஷ விதரணாய

நீலாயதாக்ஷீ மனோஹராய

கு3ரு கு3ஹ முதி3தாய


Back

Tamil - Word Division

பல்லவி

ஸி1வ காய-ஆரோஹண-ஈஸா1ய நமஸ்தே ஸ்ரீ


ஸமஷ்டி சரணம்

ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2த

வரத3-அப4ய கராய

பு4வன த்ரய மோஹிதாய

போ4க3 மோக்ஷ விதரணாய

நீல-ஆயத-அக்ஷீ மனோ-ஹராய

கு3ரு கு3ஹ முதி3தாய


pallavi

Siva kAyArOhaNESAya namastE SrI


samashTi caraNam

Siva rAjadhAnI kshEtra sthita

varadAbhaya karAya

(madhyama kAla sAhityam)

bhuvana traya mOhitAya

bhOga mOksha vitaraNAya

nIlAyatAkshI manOharAya

guru guha muditAya


kshEtra - nAgappaTTinam - Siva rAjadhAnI


kAyArOhaNa - The term ‘kAyArOhaNa sthalaM’ means 'a shrine where all beings become one with Lord ziva during the great deluge'. The name kAyArOhaNa is associated with the Lakulisa Pasupata Saiva sect which originated in Gujarat. This sect of saivism is said to have been widespread in Tamilnadu during the days of Mahendravarma Pallavan. There is a temple with the same name at Gujarat - kArvAn - kAyArohaNa svAmi (barODa).

kAyArOhaNa-1; kAyArOhaNa-2


Back

English - Word Division

pallavi

Siva kAya-ArOhaNa-ISAya namastE SrI


samashTi caraNam

Siva rAjadhAnI kshEtra sthita

varada-abhaya karAya

bhuvana traya mOhitAya

bhOga mOksha vitaraNAya

nIla-Ayata-akshI manO-harAya

guru guha muditAya

Meaning

pallavi

namastE                       - Salutations to you,

Siva kAya-ArOhaNa-ISAya       - to (you who are) Shiva known as Kayarohanesha,


samashTi caraNam

Siva rAjadhAnI kshEtra sthita - the one residing in the sacred place Shiva-Rajadhani (Nagapattinam),

varada-abhaya karAya          - the one whose hands gesture assurance of fearlessness and granting of boons,

bhuvana traya mOhitAya       - the one who enchants the three worlds,

bhOga mOksha vitaraNAya       - the one who gives away both enjoyment and liberation,

nIla-Ayata-akshI manO-harAya - the one who captivates the heart of Goddess Nilayatakshi,

guru guha muditAya           - the one who delights Guruguha.


Comments

This Kriti is in the fourth VibhaktiIn Nagapattinam, the lord granted salvation to Pundarika Rishi with his mortal body and so is called Kayarohaneshvara.


சியாமா சாஸ்திரி கீர்த்தனை 2

 பல்லவி

நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3(த3)ம்பா3
நீ த3ய ஸேயவே

அனுபல்லவி
கன்ன தல்லி நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)

சரணம் 1
ஆதி3 ஸ1க்தி ம(ஹே)ஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீ(லா)ய(தா)க்ஷீ ப4வானீ (நன்னு)

சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே12ருனி ராணீ லலி(தா)ம்பி3கே வரதே3 (நன்னு)

சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ நாத3 ரூபிணீ நளி(னா)க்ஷீ (நன்னு)


பல்லவி
என்னைக் காக்கலாகாதா? ஓ பல்லுலகத் தாயே!
நீ கருணை காட்டுவாயம்மா.

அனுபல்லவி
ஈன்ற தாய் நீயே, அம்பா!
எனது முறையீடுகளைக் கேட்கலாகாதா?

சரணம் 1
ஆதி சக்தீ! மகேசுவரீ! கௌமாரீ!
ஆதரிப்பாயம்மா, வெகு விரைவாக. கருந்தடங்கண்ணீ! பவானீ!

சரணம் 2
கோமள, மிருதுவான குரலினளே! கல்யாணீ!
மதியணிவோனின் ராணீ! லலிதாம்பிகையே! வரமருள்பவளே!

சரணம் 3
சியாம கிருஷ்ணனின் சோதரியே! ஓங்காரீ!
சாம்பவீ! ஓ ஈன்றவளே! நாத வடிவினளே! கமலக்கண்ணீ!

கருந்தடங்கண்ணீ - நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர்.
மதியணிவோன் - சிவன்


Word Division

பல்லவி
நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3த்-அம்பா3
நீ த3ய ஸேயவே

அனுபல்லவி
கன்ன தல்லி நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)

சரணம் 1
ஆதி3 ஸ1க்தி மஹா-ஈஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீல-ஆயத-அக்ஷீ ப4வானீ (நன்னு)

சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே12ருனி ராணீ லலிதா-அம்பி3கே வரதே3 (நன்னு)

சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ நாத3 ரூபிணீ நளின-அக்ஷீ (நன்னு)

http://syamakrishnavaibhavam.blogspot.com/2011/06/syama-sastry-kriti-nannu-brova-rada.html?m=1

6 Jan 2022

அருள்மிகு மலையீஸ்வரன் திருக்கோயில்

 🌟 #தைப்பூசம் அன்று பராசர முனிவருக்கு நாகையில் கிடைக்கப்பெற்ற #கைலாய_தரிசனம். 🌷

அருள்மிகு மலையீஸ்வரன் திருக்கோயில், #நாகப்பட்டினம்.


ஸ்தல வரலாறு 


 🌷 இறைவனைப் பல்வேறு தலங்களில் காணும்படி யாத்திரையாக நாகைக்கு வந்த வேத வியாசரின் தந்தையான பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும், அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. 

பராசர முனிவர்

 

🌷எனவே ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார். 


🌷 அதன் பயனாக தைப்பூசம் நன்னாளில் சிவபெருமானின் கைலாய தரிசனம் கண்டு, கல்ப காலம் வரை நித்தியத்துவம் பெரும் வரம் பெற்றார் என்பது ஐதீகம்.


#நாகை_காரோணம்

30 Dec 2021

திருமுறை வைப்பு பாடல்கள்

 சிவ ராஜதானி ஷேத்திரம் என்று போற்றப்படக் கூடிய நாகை காரோணம் திருத்தம் தேவார மூவராலும் (எட்டு பதிகங்கள்) பாடப்பெற்ற சிறப்புடையது. மேலும் சைவத் திருமுறைகளில் இத்திருத்தலம் பற்றிய பாடல்கள் பல அமையப் பெற்றுள்ளன அவை முறையே,


திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு இரண்டு பதிகங்கள்

திருநாவுக்கரசர் தேவாரம் நான்கு பதிகங்கள்

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டு இரண்டு பதிகங்கள் (அவற்றில் ஒன்று பிற்சேர்க்கையாக கிடைக்கப்பெற்றது)

மற்றும் "காரோணம்" என்று பல்வேறு தலங்களின் திருமுறை பதிகங்களில் குறிப்பிடப்பட்டு அவை வைப்பு பாடல்களாகவும் அமைந்துள்ளன,

அவற்றுள் மூன்று காரோணத் தலங்களில் ஒன்றான குடந்தைக் காரோணம் திருத்தலம் திருஞான சம்பந்தரால் நேரடியாக பாடப்பட்டுள்ளது. (தி 01.072)

மேலும் திருநாவுக்கரசர்  நாகைக் காரோணரை பல தலங்களின் பதிகங்களில் நினைவு கூறி உள்ளார். அவைகளாவன,

{ தி - திருமுறை, ப- பதிகம், பா - பாடல் }

தி06.ப002.பா06 (மங்குல் மதிதவழும் - தலம் : கோயில் தில்லை )

காதார் குழையினர் கட்டங் கத்தர்
    கயிலாய மாமலையார் #காரோணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
    முதலும் இறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ அன்று
    வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாள்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

--------------------------------------------------------------------------

தி06.ப007.பா08 (செல்வப் புனற்கெடில - தலம் : திருவதிகை வீரட்டானம் )

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந் திண்டீச் சரமுந் திருப்புகலூர் எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச் சரமுநல் லேமங்கூடல் கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங் குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங் கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங் #காரோணந் தம்முடைய காப்புக்களே

-------------------------------------------------------------------------

தி06.ப010.பா10 (நோதங்க மில்லாதார் -
திருப்பந்தணைநல்லூர்)

கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
#காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலை யின்மே லிருந்து
வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

-------------------------------------------------------------------------

06.013.04 ( கொடிமாட நீடெருவு - திருப்புறம்பயம் )

பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப் பனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர் நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில் கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங் #கடனாகைக் #காரோணங் கைவிட் டிந்நாள் பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

-------------------------------------------------------------------------

06.017.08 (ஆறு சடைக்கணிவர் - திரு இடைமருதூர் )

காவார் சடைமுடியர் #காரோணத்தர் கயிலாய மன்னினார் பன்னு மின்சொற் பாவார் பொருளாளர் வாளார் கண்ணி பயிலுந் திருவுருவம் பாக மேயார் பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர் புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

-------------------------------------------------------------------------

06.028.09 ( நீற்றினையும் - திரு ஆரூர் )

பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும் பிறவி யிறவி இலாதார் போலும் முண்டத்து முக்கண் ணுடையார் போலும் முழுநீறு பூசு முதல்வர் போலுங் கண்டத் திறையே கறுத்தார் போலுங் காளத்தி #காரோணம் மேயார் போலும் அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும் அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

-------------------------------------------------------------------------

06.033.08 ( பொருங்கைமதக் - ஆரூர் அரநெறி )

காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக் #காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப் பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப் பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச் சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ் சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 

-------------------------------------------------------------------------

06.037.09 ( ஆரார் திரிபுரங்கள் - திருவையாறு )

கச்சியே கம்பனே யென்றேன் நானே
    கயிலாயா #காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
    நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
    உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின்றேனே

-------------------------------------------------------------------------

06.051.01 - ( திருவீழிமிழலை திருத்தாண்டகம் )

கயிலாய மலையுள்ளார் #காரோணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார் மயிலாடு துறையுளார் மாகா ளத்தார் வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த அயில்வாய சூலமுங் காபா லமும் அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி வெயிலாய சோதி விளங்கு நீற்றார் வீழி மிழலையே மேவி னாரே. 

-------------------------------------------------------------------------

06.054.06 ( ஆண்டானை - திரு புள்ளிருக்குவேளூர் )

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக் கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக் #கடல்நாகைக் #காரோணங் கருதி னானை இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

-------------------------------------------------------------------------

06.62.06 ( எத்தாயர் எத்தந்தை - திருவானைக்கா )

உரையாரும் புகழானே யொற்றி யூராய்
    கச்சியே கம்பனே #காரோணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
    மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
    திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே

-------------------------------------------------------------------------

06.070.07 (  தில்லைச் சிற்றம்பலமுஞ் - க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகம், பொதுப்பதிகம் )

வீழி மிழலைவெண் காடு வேங்கூர் வேதி குடிவிசய மங்கை வியலூர் ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை ஆலங் காடும் அரதைப் பெரும் பாழி பழனம்பனந் தாள்பா தாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண் காழி #கடல்நாகைக் #காரோ ணத்துங் கயிலாய நாதனையே காண லாமே.

-------------------------------------------------------------------------

06.082.07 ( வானத் திளமதியும் - திரு சாய்க்காடு )

கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங் #காரோணத் தென்று மிருப்பார் போலும் இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும் ஏகம்பம் மேவி யிருந்தார் போலும் படியொருவ ரில்லாப் படியார் போலும் பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ் செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.


-------------------------------------------------------------------------

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டு
07.031.04 ( முந்தையூர் முதுகுன்றங் - திரு இடையாறு )

கச்சையூர் காவங் கழுக்குன்றங் #காரோணம் பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர் கச்சியூர் கச்சி #சிக்கல் நெய்த்தானம் மிழலை இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே

-------------------------------------------------------------------------

பதினோராம் திருமுறை பதிகங்கள்

கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி (11.022.66)

பாடல் எண் : 66

எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும் எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக் கண்டத்தான் நால்வேதன் #காரோணத் தெம்மானைக் கண்டத்தான் நெஞ்சேகாக் கை

-------------------------------------------------------------------------

பரணதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி (11.023.35)

பாடல் எண் : 35

கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயான் கடநாகம்
மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய்
மாளவிரித் தாடுவான் வந்து .

-------------------------------------------------------------------------

மேலும் பன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர் (பெரிய) புராணத்தில் அதிபத்த நாயனார் வரலாற்றில் இத்திருத்தலம் பற்றிய பாடல்கள் அமைந்துள்ளன.

தொகுப்பிற்கு உறுதுணையாக இருந்த இணையதளங்கள் shaivam.org மற்றும் thevaaram.org

காரோணா .. தியாகேசா
     திருச்சிற்றம்பலம்








































3 Sept 2021

நாகை காரோணமும், நாவுக்கரசர் கண்ட நடராஜரும்

பல்லவர் காலத்தில் திருநாவுக்கரசரும். ஞானசம்பந்தரும் கடல் #நாகை காரோணத்தான் என்று இக் கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனை தம் பாடல்களில் பணிந்தேத்துகின்றனர்.


காரோணர் சன்னதியை அடுத்து #தியாகராஜர் சன்னதியுள்ளது. அதன் சுவற்றில் வெளிச்சம் குறைந்த நிலையிலுள்ள சிற்பம் கண்ணையும், கருத்தையும் கவருவதாகவுள்ளது. இது போன்ற சிற்பத்தினைத் தமிழகத்தில் காண்பது மிகவும் அரிது. அர்ச்சகரின் தீபஒளியில் மட்டுமே அச்சிற்பத்தினை காணமுடியும். 


அச்சிற்பம் #நடராஜர் சிற்பமாகும். இதன் வலதுபுறம் ஜுரகரேஸ்வரர் சிற்பம் மகிச்சிறியளவில் உள்ளது. ஆடவல்லானின் ஆடலுக்கு இணையாக அம்மையும் ஆடுவதாகவும் வலதுகால் கீழாக முயலகனும் ஒருபுறம் வாணன் #குடமுழா இசைக்க மறுபுறம் #பூதகணங்கள் வாத்திய கருவிகளை கையாளுகின்ற காட்சியும் அமைந்துள்ளது. 


ஆடல் இறைவனின் தலைக்கு மேலாக இடதுபுறத்தில் கங்காதேவியின் உருவமும் வலதுபுறத்தில் தட்சிணாமுர்த்திக்குரிய உருத்திராட்ச மாலையும்,பை மற்றும் மயிற்பீலியினாலான சாமரம் போன்றவையும் வடிக்கப்பட்டுள்ளதால் (உயர்ந்த #பாசுபத விரதம் ஞானம் எனப்படும், #சிவன் யோக ஆசிரியனாக ஞானத்தை வழங்கும் குருவாகவிளங்குகிறார் என ம,இராசமாணிக்கனார் தமது நுலில் குறித்துள்ளார்) இப்பகுதியானது தட்சிணாமூர்த்தியைக்குறிப்பதாக வடிக்கப்பட்டுள்ளது. 


இச்சிற்பத் தொகுதியை நோக்கும்போது அது #சோழர் காலத்தைச் சேர்ந்ததாக அறியமுடிகின்றது. இதனை வடிப்பதற்குக் காரணமாக அமைவது #நாவுக்கரசர் நாகையில் கண்ட நடராஜரின் ஆடல்காட்சியாகும். அக்காட்சியை அவர் தம்முடைய திருவாக்கினால் 


"நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ்சூடி

மறையொலி பாடியாடன் மயானத்து மகிழ்ந்தமைந்தன்

கறைமலி கடல்சூழ்நாகைக் காரோணங் கோயில்கொண்ட

இறைவனை நாளுமேத்த விடும்பைபோ யின்பமாமே".

    - என்று சுட்டுகின்றார். 


#பல்வர் காலத்தில் நாவுக்கரசர் கண்ட நடராஜர் திருவுருவம் சோழ அரசர்களால் பாசுபதசைவத்துடன தொடர்புபடுத்தப்பட்டதை இதன் மூலம் அறிய முடிகின்றது. இச்சிற்பத்தில் #ஆடவல்லான், #கங்காதரர் மற்றும் #தட்சிணாமூர்த்தி ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே வடிவாகக் காணப்படுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இவ்வாறாக மூன்று திருவுருவங்களும் ஒருங்கே அமைந்த சிற்பத்தைத் தமிழகத்தில் எங்கும் காண்பது அரிதாகும். அத்தகு பெருமையினை #நாகை_காரோணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


நன்றி: தில்லைராஜன் இணையப்பக்கம்


#NagaiKaronam #NagaiTemples #Shaivam #SivanTemple #SivaRajathani #Nadarajar

அதிபத்த நாயனார் - திருத்தொண்டர் (பெரிய)புராணம்

"விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் ” - திருத்தொண்டத்தொகை 


“திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்

றுறவமர் மாகடற் கேவிடு வோனொரு நாட்கனக

நிறமமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்

புறமமர் நாகை யதிபத்த னாகிய பொய்யிலியே” 


- திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி (52)


குறிப்புரை: கடலில் வலையை வீசி மீன் பிடிக்கும் பொழுது மீன் ஒன்றே ஒன்று தனியாக வலையில் அகப்பட்டுக் கிடைக்குமாயின் அந்த மீனை, 'இந்த மீன் சிவனுக்கு உரிய மீன்' என்று அதனை மீண்டும் கடலிலே விடுபவர் இந் நாயனார். இவருக்குச் சோதனையாகப் பல நாட்களில் வலையில் ஒவ்வொரு மீனே அகப்பட்டு வந்தது. அதைக் கடலிலே விட்டமையால் உணவின்றிக் குடும்பத்துடன் மெலியும் நாளில் ஒரு நாள் தனி ஒரு மீன் பொன்னும், இரத்தினமுமே உருவாகி, உலகம் வில் பெறும் அளவினதாய் அகப்பட, அதனையும் கடலிலே விடுத்தார், உடனே பெருமான் காட்சி தந்து அழைத்துச் செல்ல, முத்தி பெற்றார். இந் நாயனார் பத்தருட் சிறந்த 'அதிபத்தர்' எனப் பெயர் பெற்றமை உணரற்பாற்று. அமர் - அந்த மீன் வாழ்கின்ற. புறம் - புறத்துச் சூழ்ந்த பொய்கைகள்; ஆகுபெயர். நாகை - நாகப் பட்டினம்.



சேக்கிழார் பெரியபுராணம் 


பாடல் எண் : 1 


மன்னி நீடிய செங்கதி

    ரவன்வழி மரபில்

தொன்மை யாம்முதற் சோழர்தந்

    திருக்குலத் துரிமைப்

பொன்னி நாடெனுங் கற்பகப்

    பூங்கொடி மலர்போல்

நன்மை சான்றது நாகைப்பட்

    டினத்திரு நகரம் 


பொழிப்புரை : உரிமை நிலைபெற்று வாழ்ந்து வருகின்ற கதிரவன் வழியில் வந்த மரபான, பழமையும் முதன்மையும் பெற்ற சோழர்க ளின் குலத்திற்கு உரிமையுடைய காவிரிநாடு என்னும் கற்பகப் பூங் கொடியில் மலர்ந்த மலரைப் போன்று நாகைப்பட்டினம் என்ற நகரம் நலம் சிறந்து விளங்கும் மேன்மை உடையதாம்.


பாடல் எண் 2 


தாம நித்திலக் கோவைகள்

    சரிந்திடச் சரிந்த

தேம லர்க்குழல் மாதர்பந்

    தாடுதெற் றிகள்சூழ்

காமர் பொற்சுடர் மாளிகைக்

    கருங்கடல் முகந்த

மாமு கிற்குலம் மலையென

    ஏறுவ மருங்கு 


பொழிப்புரை: 


முத்து மாலைகளின் கோவைகள் சரியத் தேன் பொருந்திய மலர்களைச் சூடிய தாழ்ந்த கூந்தலையுடைய பெண்கள் பந்தாடும் மேடைகளைக் கொண்ட விரும்பத்தக்க பொன் ஒளி மின்னும் மாளிகைகளை, இவை மலை என்று மயங்கி, அவற்றின் அருகே, கரிய கடல் நீரை முகந்து நிற்கும் கரிய மேகக் கூட்டங்கள் நெருங்குவன. 


பாடல் எண் : 3 


பெருமை யில்செறி பேரொலி

    பிறங்கலின் நிறைந்து

திரும கட்குவாழ் சேர்விட

    மாதலின் யாவும்

தருத லில்கடல் தன்னினும்

    பெரிதெனத் திரைபோல்

கரிப ரித்தொகை மணிதுகில்

    சொரிவதாங் கலத்தால். 


பொழிப்புரை: 


பெருமை மிக்க பேரோசை நிறைதலாலும், அழகு நிறைந்த திருமகள் வாழும் உறைவிடமாதலாலும், வேண்டும் பொருள்களை எல்லாம் அளித்தலாலும், கடலை விடப் பெரியது என்று சொல்லுமாறு விளங்கி, அலை என யானைத் தொகைகள், குதிரைத் தொகைகள், மணிகள், ஆடைகள் ஆகிய இவை முதலான பொருள்களை எல்லாம் மரக்கலங்களில் கொணர்ந்து தர, அந்நகரம் சிறந்து விளங்கும்.



பாடல் எண் : 4 


நீடு தொல்புகழ் நிலம்பதி

    னெட்டினும் நிறைந்த

பீடு தங்கிய பலபொருள்

    மாந்தர்கள் பெருகிக்

கோடி நீள்தனக் குடியுடன்

    குவலயங் காணும்

ஆடி மண்டலம் போல்வதவ்

    வணிகிளர் மூதூர்

பொழிப்புரை: 


பெரும் புகழுடைய பதினெண் நிலங்களிலும் நிறைந்த பெருமையுடைய பல பொருள்களைக் கொண்ட மக்களும் சேர்ந்து பெருகி வாழ்வதாலும், கோடியளவினும் பெருகிய செல்வக் குடி மக்களுடன் விளங்குவதாலும், அவ்வழகுடைய பழைய நகரம், இவ்வுலகம் முழுவதும் தனக்குள் நிழலாக அடங்கக் காணப்படுகின்ற கண்ணாடி மண்டலம் போன்றதாகும். 


பாடல் எண் : 5 


அந்நெ டுந்திரு நகர்மருங்

    கலைகடல் விளிம்பில்

பன்னெ டுந்திரை நுரைதவழ்

    பாங்கரின் ஞாங்கர்

மன்னு தொன்மையின் வலைவளத்

    துணவினில் மலிந்த

தன்மை வாழ்குடி மிடைந்தது

    தடநுளைப் பாடி 


பொழிப்புரை: 


அத்தகைய பெருநகரத்தின் அருகில் அலைகளை உடைய கடல் விளிம்பில், நீண்டு அலைகளின் நுரை வந்து தவழ்வ தற்கு இடமான பகுதிகளை அடுத்து, நிலையானதும் பழைமையான துமான பரதவர் மரபில், வலைவீசி மீன் பிடிக்கும் தொழிலால் பெறும் வளமையுடைய மீன் உணவு பெருகிய இயல்பினால் வாழ்வு பெற்ற பரதவர் குடிகள் நெருங்கியுள்ளன.



பாடல் எண் : 6 


புயல ளப்பில வெனவலை

    புறம்பணை குரம்பை

அயல ளப்பன மீன்விலைப்

    பசும்பொனி னடுக்கல்

வியல ளக்கரில் விடுந்திமில்

    வாழ்நர்கள் கொணர்ந்த

கயல ளப்பன பரத்தியர்

    கருநெடுங் கண்கள் 


பொழிப்புரை: 


அளவற்ற மேகங்கள் கிடந்தாற்போல் வலைகள் பெருகிய குடிகளின் அருகே, மீன் விலைக்குக் கொள்வோர் கொண்டு வந்த பசும்பொற்குவியல்கள் அளவிடப்படுவன. பரந்த கடலில் செலுத்தும் மீன்பிடிப் படகுகளின் வழி, பரதவர் கொணர்ந்த கயல் மீன்களை அவரிடம் பெற்றுக் கொள்ளும் பரத்தியரின் கரிய கண்கள் அவை இவ்வளவு விலை பெறும் என்பதைக் கண்ட அளவில் அளந்து விடுவன.



பாடல் எண் : 7 


உணங்கல் மீன்கவர் வுறுநசைக்

    குருகுடன் அணைந்த

கணங்கொள் ஓதிமங் கருஞ்சினைப்

    புன்னையங் கானல்

அணங்கு நுண்ணிடை நுளைச்சியர்

    அணிநடைக் கழிந்து

மணங்கொள் கொம்பரின் மருங்குநின்று

    இழியல மருளும் 


பொழிப்புரை: 


உலர்ந்த மீன்களைக் கவர்தற்கு ஆசையுடைய பறவைகளுடன் வந்த கூட்டமான அன்னப் பறவைகள், வருந்துகின்ற நுண்ணிய இடையையுடைய நுளைச்சியரின் அழகிய நடைக்குத் தோற்று, உயர்ந்த கிளைகளையுடைய புன்னைக் காட்டில், மணம் மிக்க அப்புன்னைக் கொம்புகளினின்றும் இறங்காமல் மருட்சி கொண்டி ருக்கும்.



பாடல் எண் : 8 


வலைநெ டுந்தொடர் வடம்புடை

    வலிப்பவர் ஒலியும்

விலைப கர்ந்துமீன் குவைகொடுப்

    பவர்விளி ஒலியும்

தலைசி றந்தவெள் வளைசொரி

    பவர்தழங் கொலியும்

அலைநெ டுங்கடல் அதிரொலிக்

    கெதிரொலி யனைய 


பொழிப்புரை: 


வலைகளில் பிணிக்கப்பட்டிருக்கும் நீண்ட தொடர் களையுடைய வடங்களை இழுத்துச் செம்மை செய்பவர்களின் ஒலியும், விலையை எடுத்துக் கூறி மீன் குவியலைக் கொடுப்பவர் வாங்குவோரை அழைக்கின்ற ஒலியும், மிகச் சிறந்த வெண்மையான சங்குகளை எடுத்துக் குவிப்பவர்களின் ஒலியும், பெரிய கடல் ஒலிக்கு எதிர் ஒலி போன்று விளங்குவன. 


பாடல் எண் : 9 


அனைய தாகிய அந்நுளைப்

    பாடியில் அமர்ந்து

மனைவ ளம்பொலி நுளையர்தங்

    குலத்தினில் வந்தார்

புனையி ளம்பிறை முடியவர்

    அடித்தொண்டு புரியும்

வினைவி ளங்கிய அதிபத்தர்

    எனநிகழ் மேலோர்



பொழிப்புரை: 


அத்தகைய நுளைப்பாடியில் வாழ்ந்து, அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிவரும் நுளையரின் குலத்தில் தோன்றியவர். இளம்பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் அடித்தொண்டு செய்யும் செயலில் சிறந்து விளங்கிய `அதிபத்தர்` எனும் பெயர்பெற்ற மேன்மையை உடையவராவர்.


பாடல் எண் : 10 


ஆங்கு அன்பர்தாம் நுளையர்தந்

    தலைவராய் அவர்கள்

ஏங்கு தெண்டிரைக் கடலிடைப்

    பலபட இயக்கிப்

பாங்கு சூழ்வலை வளைத்துமீன்

    படுத்துமுன் குவிக்கும்

ஓங்கு பல்குவை யுலப்பில

    வுடையராய் உயர்வார்



பொழிப்புரை: 


அவ்வதிபத்தர் என்னும் அன்பர், நுளையரின் தலைவராகி, ஒலிக்கின்ற தெளிந்த அலைகளையுடைய கடலில் பலவாறு தொழில் செய்து, பக்கங்களில் சூழும் வலைகளை வளைத்து வீசி, மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்து குவிக்கும் உயர்ந்த பலவகை மீன் குவைகள் பலவாக, அவற்றை உடையவராய் அதனால் உயர்ந்தவராய் விளங்கினார். 


பாடல் எண் : 11 


முட்டில் மீன்கொலைத் தொழில்வளத்

    தவர்வலை முகந்து

பட்ட மீன்களில் ஒருதலை

    மீன்படுந் தோறும்

நட்ட மாடிய நம்பருக்

    கெனநளிர் முந்நீர்

விட்டு வந்தனர் விடாதஅன்

    புடன்என்றும் விருப்பால் 


பொழிப்புரை: 


குறைவில்லாத மீன்களைப் பிடித்து, அக்கொலைத் தொழிலின் வளத்தையுடைய பரதவர், வலைகளால் வாரி எடுக்க, அதனுள் அகப்பட்ட மீன்களில், ஒரு தலைமையான மீன் கிட்டும் தோறும், `இஃது ஐந்தொழில் செய்து அருட்கூத்தாடுகின்ற ஐயருக்காகுக!\' என்று, இடையறாத அன்பினால் விருப்புடன், குளிர்ந்த கடலிடத்தில் நாடோறும் விட்டு வந்தார்.


பாடல் எண் : 12 


வாகு சேர்வலை நாள்ஒன்றில்

    மீனொன்று வரினும்

ஏக நாயகர் தங்கழற்

    கெனவிடும் இயல்பால்

ஆகு நாள்களில் அனேகநாள்

    அடுத்தொரு மீனே

மேக நீர்படி வேலையில்

    படவிட்டு வந்தார் 


பொழிப்புரை: 


ஒழுங்காக மீன்களைப் பிடித்து வரும் வலையில், ஒரு நாளில் ஒரு மீனே வரினும் `முழுமுதல்வரான இறைவரின் திருவடிக்கே' ஆகும் என விடுத்துவரும் நாள்களில், பல நாள்கள் தொடர்ந்து ஒரு மீனே, மேகம் படியும் கடலில் கிடைக்க, அதனை, அவர், இறைவருக்காக என்றே கடலின்கண் விட்டு வந்தார்.


பாடல் எண் : 13 


மீன்வி லைப்பெரு குணவினில்

    மிகுபெருஞ் செல்வம்

தான்ம றுத்தலின் உணவின்றி

    அருங்கிளை சாம்பும்

பான்மை பற்றியும் வருந்திலர்

    பட்டமீன் ஒன்று

மான்ம றிக்கரத் தவர்கழற்

    கெனவிட்டு மகிழ்ந்தார் 


பொழிப்புரை: 


மீனை விற்பதனால் பெருகும் உணவுப் பண்டங்க ளால் மிக்க பெருஞ்செல்வம் இவ்வகையில் சுருங்கியமையால், தம் அரிய உறவினர்கள் உணவில்லாமல் பசியால் வருந்துவது பற்றியும், அவர் வருந்தவில்லை. வலையில் அகப்படுவது ஒரு மீனே யாயினும் அதனையும் தொடர்ந்து, மான் கன்றைக் கையில் ஏந்திய இறைவரி 


பாடல் எண் : 14 


சால நாள்கள்இப் படிவரத்

    தாம்உண வயர்த்துக்

கோல மேனியுந் தளரவுந்

    தந்தொழில் குறையாச்

சீல மேதலை நின்றவர்

    தந்திறந் தெரிந்தே

ஆல முண்டவர் தொண்டர்அன்

    பெனும்அமு துண்பார் 


பொழிப்புரை: 


பல நாள்கள் இவ்வாறே நிகழத் தாம் உணவு மறந்து வாடித் தம் அழகிய திருமேனியும் தளர்ச்சியடையத் தம் தொண்டினின் றும் குறைவுபடாத அவ்வொழுக்கத்தில் சலியாமல் ஒழுகியவரின் இயல்பை அறிந்து, நஞ்சுண்ட இறைவர் இத் தொண்டரின் அன்பு எனும் அமுதத்தை உண்பாராய், 


பாடல் எண் : 15 


ஆன நாள்ஒன்றில் அவ்வொரு

    மீனுமங் கொழித்துத்

தூநி றப்பசுங் கனகநற்

    சுடர்நவ மணியால்

மீனு றுப்புற அமைத்துல

    கடங்கலும் விலையாம்

பான்மை அற்புதப் படியதொன்

    றிடுவலைப் படுத்தார் 


பொழிப்புரை: 


முற்கூறியவாறே நிகழ்ந்த நாள் ஒன்றில், அவ்வொரு மீனும் அங்கு வலையில் அகப்படாது போகச் செய்து, தூய நிறமுடைய பசும் பொன்னாலும் ஒளியுடைய மணிகளாலும் மீன் உறுப்புக்கள் பொருந்தும்படி அமைத்து, உலகனைத்துமே அதற்குரிய விலை என மதிக்கத்தக்க அற்புதத் தன்மை கொண்ட ஒரு மீன், வீசிய வலையில் அகப்படுமாறு இறைவர் செய்தனர். 


பாடல் எண் : 16 


வாங்கு நீள்வலை அலைகடற்

    கரையில்வந் தேற

ஓங்கு செஞ்சுடர் உதித்தென

    வுலகெலாம் வியப்பத்

தாங்கு பேரொளி தழைத்திடக்

    காண்டலும் எடுத்துப்

பாங்கு நின்றவர் மீன்ஒன்று

    படுத்தனம் என்றார்



பாடல் எண் : 17 


என்று மற்றுளோர் இயம்பவும்

    ஏறுசீர்த் தொண்டர்

பொன் திரட்சுடர் நவமணி

    பொலிந்தமீ னுறுப்பால்

ஒன்று மற்றிது என்னையா

    ளுடையவர்க் காகும்

சென்று பொற்கழல் சேர்கெனத்

    திரையொடுந் திரித்தார்



பொழிப்புரை: 


என்று பரதவர் உரைக்கவும், அதுகேட்ட மிகுகின்ற சிறப்பையுடைய தொண்டரான அதிபத்தர் `பொன்னும் தொகுதியான ஒளியுடைய நவமணிகளும் விளங்கும், மீன் உறுப்புகளினால் பொருந்தும் உலகியலில் காணக் கூடாத இம்மீன், என்னை ஆட்கொள் கின்ற இறைவருக்கே ஆகும்: அவரது பொற்கழலை இது சேர்வதா கும்!' என்று கடலில் விடுத்தார். 


பாடல் எண் : 18 


அகில லோகமும் பொருள்முதற்

    றாம்எனும் அளவில்

புகலு மப்பெரும் பற்றினைப்

    புரையற எறிந்த

இகலில் மெய்த்திருத் தொண்டர்முன்

    இறைவர்தாம் விடைமேல்

முகில்வி சும்பிடை யணைந்தனர்

    பொழிந்தனர் முகைப்பூ 


பொழிப்புரை: 


எவ்வுலகும் பொருளையே முதன்மையாக வுடையது என்று கூறும் அப்பெரிய வலிய பொன்னாசை என்னும் பெரும் பற்றை முழுமையாக நீக்கிய ஒப்பில்லாத மெய்த்தொண்டர் முன்னே, இறைவர் விடையூர்தியின் மேல், மேகம் தவழும் வானத்தில் எழுந்தருளினார். அதுபொழுது தேவர்கள் கற்பகப் பூமழை சொரிந்தனர்.


பாடல் எண் : 19 


பஞ்ச நாதமும் எழுந்தன

    அதிபத்தர் பணிந்தே

அஞ்ச லிக்கரம் சிரமிசை

    யணைத்துநின் றவரை

நஞ்சு வாண்மணி மிடற்றவர்

    சிவலோகம் நண்ணித்

தஞ்சி றப்புடை அடியர்பாங்

    குறத்தலை யளித்தார் 


பொழிப்புரை: 


`பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' (குறள், 247) என்ற திருவள்ளுவனாரும். `பொருள்ளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது' (குறள்., 248) என்பர். அவ்வருட்செல்வமே அதிபத்தரின் செல்வமாயிற்று.


பாடல் எண் : 20 


தம்ம றம்புரி மரபினில்

    தகும்பெருந் தொண்டு

மெய்ம்மை யேபுரி அதிபத்தர்

    விளங்குதாள் வணங்கி

மும்மை யாகிய புவனங்கள்

    முறைமையிற் போற்றும்

செம்மை நீதியார் கலிக்கம்பர்

    திருத்தொண்டு பகர்வாம் 


பொழிப்புரை: 


மீன்பிடிக்கும் தம் மரபிற்கு ஏற்றவாறே, தகுதியான பெருந் திருத்தொண்டை உண்மையில் தவறாது செய்து அருள் பெற்ற அதிபத்த நாயனாரின் விளக்கம் செய்யும் திருவடிகளை வணங்கி, இனி உலகங்கள் மூன்றும் முறையாகப் போற்றுகின்ற செம்மையும் நீதியும் உடைய கலிக்கம்ப நாயனாரின்' திருத்தொண்டைக் கூறுவாம். அதிபத்த நாயனார் புராணம் முற்றிற்று.


14 Aug 2021

07.101 பொன்னாம் இதழி விரைமத்தம்

 இன்று #ஆடி_சுவாதி 🌷 #சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை 🙏( 14/08/2021)


சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டில் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ள இப்பதிகம் நாகை காரோணம் திருத்தலத்தில் இயற்றி உள்ளதாக அமைந்துள்ளது. Shaivam.Org


#பொன்னாம்_இதழி_விரைமத்தம்

(07.101 ஏழாம் திருமுறை) பண் : காந்தாரம் 


பொன்னாம் இதழி விரைமத்தம் பொங்குகங்கைப் புரிசடைமேல் முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்னே துன்னா மயூரம் சோலைதொறும் ஆட தூரத் துணைவண்டு தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே.  1 


வரைக்கை வேழம் உரித்தும் அரன்நடமாட்டு ஆனால் மனைதோறும் இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் திரைக்கை காட்டும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  2 


புல்லும் பெறுமே விடை புனரச் சடைமேல் ஒரு பெண் புக வைத்தீர் இல்லம் தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றைமுகம் மோதிரம் காட்ட செல்லும் புறவின் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  3 


மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி பூண்தார் பொறி ஆடு அரவு ஆமை புரம்மூன்று எரித்தீர் பொருள்ஆக தூண்டா விளக்கு மணிமாட வீதிதோறும் சுடர்உய்க்க சேண்தார் புரிசைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  4 


ஒருவர்க்கு ஒருவர்அரிது ஆகில் உடை வெண்தலை கொண்டு ஊர்ஊரன் இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் தெருவில் சிந்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  5 


தோடை உடுத்த காது உடையீர் தோலை உடுத்துச் சோம்பாதே ஆடை உடுத்துக் கண்டக்கால் அழகிது அன்றே அரிது அன்று ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம் சேடை உடுத்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  6 


கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இக் காலம் விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணிமாளிகைக் குழாம் இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  7 


பள்ளம் பாறும் நறும் புனலைச் சூடி பெண் ஓர் பாகமா வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத் தொள்ளும் வேலைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  8 


மத்தம் கவரும் மலர்க் கொன்றைமாலைமேல் மால் ஆனாளை உய்த்து அங்கு அவரும் உரை செய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர் சித்தம் கவரும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  9 


மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் இறையில் எரித்தீர் ஏழ் உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்க மலர்ச் சிறை வண்டு அறையும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  10 


தேரார் வீதித் தென்நாகைத் திருக் காரோணத்து இறையானைச் சீரார் மாடத் திருநாவலூர்க் கோன் சிறந்த வன் தொண்டன் ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சோடு அஞ்சும் அறிவார்கள் வாரார் முலையாள் உமை கணவன் மதிக்க இருப்பார் வான் அகத்தே.  11




12 Aug 2021

நீலலோசனி ❤️ மீனலோசனி


கருந்தடங்கண்ணி அங்கயற்கண்ணி

🎯 #நாகை மற்றும் #மதுரை ஸ்தலங்களுக்கு இடையேயான சில ஒப்பீடுகள் ..

🎯 சிவபெருமானின் நாகம் வலம் செய்து உண்டான நகரம் மதுரை என்பதால் #திருஆலவாய் (ஆலம் என்றால் நாகம்) என்ற பெயர் உண்டு. நாகர்கள் வசித்து சிவபூஜை செய்த நகரம் #நாகப்பட்டினம் என அழைக்கப்படுகிறது.

🎯 மதுரையில் சொக்கநாதப் பெருமான் 64 #திருவிளையாடல்கள் நிகழ்த்தியது போல், நாகை உள்ளிட்ட #சப்தவிடங்கர் தலங்களில் தியாகராஜப் பெருமான் 360 திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார்.

🎯 மதுரையில் #சுந்தரேஸ்வரர் ஆகவும் நாகையில் #சுந்தர_விடங்கர் ஆகவும் சுவாமி அருளாட்சி புரிகிறார்.

🎯 #பதஞ்சலி, #வியாக்ரபாதர் முனிவர்களுக்கு #நடராஜர் திருநடனம் காட்டி அருளிய பல தலங்களில் இவூர்களும் அடக்கம்.

🎯 கைலாயத்தில் நடைபெற்ற சிவன் பார்வதி திருமணக் காட்சியை அகத்தியருக்கு நாகையிலும் இறைவன் காட்டியருளினார். மதுரையில் சிவபெருமான் சுந்தரேஸ்வரர் ஆக எழுந்தருளி மீனாட்சி அம்மனை #திருமணம் செய்து அருள்புரிகிறார்.

🎯 அம்பிகையின் 64 #சக்தி பீடங்களில் மிக முக்கியமான ஐந்து ஆட்சி பீடங்களில் இவ்விரு ஊர்களும் அடக்கம்,

🎯 இவ்விரு ஊர்களில் சிவஸ்தலம் முதன்மையாக உள்ளபோதிலும் அம்பிகையின் பெயராலேயே, நாகை நீலாயதாட்சி #அம்மன்_கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என அழைக்கபடுகிறது.

🎯 நாகையில் #நீலாயதாட்சி அம்மன் நித்ய கன்னியாக வீற்றிருந்து, நீலநிற கடல் போன்ற பரந்த பார்வையால் தன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள், மதுரையில் #மீனாட்சி அம்மன் நித்ய சுமங்கலியாக வீற்றிருந்து மீன் போன்ற விழிகளால் பக்தர்களை குழந்தையாக காத்து அருள்கிறாள்.

🎯 இவ்விரு தலங்களிலும் அன்னை ஸ்ரீ ராஜ #சியாமளா தேவியாகவே போற்றப்படுகின்றனர். மதுரையில் மீனாட்சி அம்மன் மரகத பச்சை நிறத்திலும் , நாகையில் நீலம் கலந்த பச்சை நிறத்திலும் ராஜ மாதங்கியாக காட்சி தருகின்றனர்.

🎯 இரு தலங்களிலும் #ஆடி மாதம் அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறும்.

🎯 நாகையில் நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு அம்பிகை பூப்பெய்தல் #பூரம்_கழித்தல் விழாவாகவும். மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு ஆடி #முளைக்கொட்டு உற்சவத்தில் பூரம் அன்று ருதுமங்கள ஸ்னானம், ஏற்றி இறக்கும் வைபவம் நடைபெறும்.

🎯 சூரசம்காரம் உடன் தொடர்புடையதாக #முருகப்பெருமான் நாகை சிக்கலில் #வேல் வாங்கி சம்காரம் செய்து, மதுரை திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை #மணம் முடிக்கிறார்.

🎯 திருமால் #அழகர் ஆக சுந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் மதுரையிலும், #அழகியார் ஆக சௌந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் நாகையில் அருள்புரிகிறார்.

#மீள்பதிவு FB\NagaiKaronam




11 Jul 2021

புண்டரீக முனிவர் வரலாறு



🌷 யமுனை நதிக்கரையில் அமைந்த ஓர் நகரத்தில் வேத, ஆகமங்களை நன்கு கற்று உணர்ந்து அதில் சிறப்புற்று விளங்கிய "கருத்தமன்" எனும் முனிவரின் மகனான "புண்டரீகர்" தனது தந்தையிடம் முக்தி நிலையை அளிக்க வல்ல இறைவனைப் பற்றியும் அதற்கான வழிகளையும் கேட்டறிந்தார். கருத்தம முனிவரும் தனது மகனுக்கு சிவபெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து, முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறைகளை கூறி புண்டரீக முனிவரை காசி செல்லும்படி பணித்தார்.


🌷 அதன்படி உடலோடு முக்தி பெற எண்ணிய புண்டரீக முனிவர் காசியை அடைந்து சுவாமி விஸ்வநாதர், விசாலாட்சி அன்னையை "ஈராயிரம் வருடங்கள்" வழிபட்டு வந்தபோதும் இறைவன் காட்சி அளிக்கவில்லை. அவ்வேளையில் "வாமதேவன்" எனும் முனிவர் புண்டரீக முனிவரிடம் இங்கு காசியில் துன்பம் அடைந்தவருக்கே சாரூப முத்தி எனவே, காஞ்சி சென்று வழிபடுமாறு கூறினார்.


🌷 பின்னர் காஞ்சி வந்தடைந்த புண்டரீக முனிவர் ஏகாம்பர நாதரை வழிபட்டு, தனியாக காயாரோகண (கச்சி காரோணம்) லிங்க பிரதிஷ்டை செய்து "பன்னிரண்டாயிரம்" ஆண்டுகள் வழிபட்டு வந்தார். அப்போது அசரீரியாக இறைவன் குடந்தை எனும் கும்பகோணம் செல்லுமாறு அருளினார்.


🌷 அதன்படி கும்பகோணம் அடைந்து கும்பேஸ்வரர் சுவாமியை வழிபட்டு, அங்கும் தனியாக காயாரோகண (குடந்தை காரோணம்) லிங்க பிரதிஷ்டை செய்து "எட்டாயிரம்" ஆண்டுகள் வழிபட்டு வந்தபோதும் இறைவன் காட்சி அளிக்கவில்லை. பின்னர் கண்ணுவ முனிவரின் ஆலோசனைப்படி உடலோடு முத்திபெற சிவராஜதானி என்றழைக்கப்படும் நாகை திருத்தலமே உகந்தது என அங்கு வந்தடைந்தார்.


🌷 அங்கு "தேவ தீர்த்தம்" முதலிய பல தீர்த்தங்களில் நீராடி "ஆதிபுராணர்" (நாகை பெரிய கோயில்) சுவாமியை வழிபட்டு சறுவ தீர்த்தத்தின் தென் மேற்கே குடில் அமைத்து அங்கே காயாரோகண (நாகை காரோணம்) லிங்கம் அமைத்து முறைப்படி கிரியை பூசனைகள் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு வந்தார். இறைவனும் மனமுவந்து காட்சியளித்து தனது மூன்றாவது காட்சியின்போது ஐக்கியப்படுத்திக் கொள்வதாக அருளினார்.


🌷 புண்டரீக முனிவரும் மகிழ்ந்து தொடர்ந்து இறைவனை, உணவின்றி விரத முறைகளுடன் வழிபட்டு இரண்டாம் காட்சியை பெற்று, மேலும் கடும் தவமியற்றி மூன்றாம் காட்சியில் இறைவனுடன் உடலோடு ஒன்றாக கலந்து பேரின்ப முக்தியடைந்தார். இந்த ஐதீக விழாவானது வருடம்தோறும் ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அர்த்தஜாமத்தில் போது நடைபெறுகிறது.


இறைவன் ஆதிபுராணர் புண்டரீக முனிவரை காயத்தோடு (உடம்போடு) ஆரோகணம் செய்து கொண்டமையால் காயாரோகணேஸ்வரர் என பின்னர் அழைக்கப்பெற்றார். சறுவ தீர்த்தம் "புண்டரீக தீர்த்தம்" என ஆயிற்று. புண்டரீக முனிவர் குடில் அமைத்து வழிபட்ட கோயில் "மேலை காரோணம்" என வழங்கப்படுகிறது.

3 Jul 2021

பஞ்ச குரோச ஆலயங்கள்,  ஏழூர் பல்லக்கு திருவிழா

  

சிவ ராஜதானி என போற்றப்படும் பல சிறப்புகள் பெற்ற "நாகை காரோணம்" திருத்தலத்தில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்கள் தேவர்களாலும் முனிவர்களாலும் தனித் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது போல, 


நகரைச் சுற்றிலும் பல ஆலயங்கள் இத் தலத்துடன் தொடர்புடையவையாக அமைந்துள்ளன. இவைகள் பஞ்ச குரோச தலங்கள் என வழங்கப்படும். (ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும்) இந்த எல்லை பரப்பில் ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ளன அவைகள் 1.பொய்கைநல்லூர் 2.பாப்பாகோயில் 3.சிக்கல் 4.பாலூர் 5.வடகுடி 6.தெத்தி 7.நாகூர் ஆகியனவாகும். 


இத்தலங்களை அரசகேசரி மற்றும் தனதத்தன் ஆகியோர் ஆனிமாத தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட்டு பாவ வினைகள் நீங்கி எமவாதனை இல்லாது முக்தி பெற்றனர். இந்த ஐதீகதின் படியே வருடம் தோறும் மேலே குறிப்பிட்ட நாளில் பஞ்ச குரோச யாத்திரை நடைபெறும். ஆனி அஷ்டமி அன்று காலை ஶ்ரீ காயாரோகண சுவாமி ஆலயத்திலிருந்து கல்யாண சுந்தரர் பல்லக்கில் எழுந்தருளி ஏழு ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தீர்த்தம்  கொடுத்தருளி, மறுநாள் காலை ஆலயம் வந்தடைவார். 


இந்த பஞ்ச குரோச ஏழூர் பல்லக்கு திருவிழாவினை அடுத்து நிறைவாக, இந்திரனிடமிருந்து சுந்தர விடங்கரை பெற்று நாகையில் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பிய  சாலிசுக மகாராஜா முக்தி பெறும் ஐதீக நிகழ்வும் நடைபெறும் என்பது குறிப்பிட தக்கதாகும்.




புராண வரலாறு 


உஜ்ஜையினி மாநகரிலே விண்டுதத்தன் என்னும் ஓர் வைஷ்யன் இருந்தான். அவன் மகன் தனதத்தன் பிறந்தது முதல் கொடு நோயால் அவதியுற்றான். ஜோதிடர்கள் அவன் வயது பதினாறு என்றனர். விண்டுதத்தன் தன் மகனை நோக்கி இவ்வூரில் மாகாளர் கோயிலை அடைந்து மாகாளரை பணிந்து

அங்குவரும் அடியார்களுக்கும், முனிவர்களுக்கும் பணிவிடை செய்யுமாறு அனுப்பினார். 


ஓர்நாள் மாகாளரை வழிபட வாம தேவ மாமுனிவர் வந்தார். வந்த முனிவரை தனதத்தன் பணிந்தார். முனிவர் 100

ஆண்டு வாழ்க என்று ஆசி வழங்கினார். அதை கேட்ட தனதத்தன் ஜோதிடர்கள் எனக்கு பதினாறு வயது

என்றனர். ஆனால் நீர் எனக்கு நூறு வயது என்று வாழ்த்தினர் என்று ஆனந்த முற்று ஆடினான். அதற்கு

முனிவர் 16 வயதில் நீ எமலோகத்தை அடைந்து இறைவனை அருளினால் மீண்டும் உஜ்ஜையினிக்கு வந்து

பின் முக்தி அடையவாய் என கூறி விடைபெற்றார். 


பின்னர் தனதத்தன் 16 வது வயதில் எமதூதர்கள் அவனை எமன் முன் நிறுத்தினர். தனதத்தன் எமனை பார்த்து வாமதேவ முனிவர் எனக்கு 100 ஆண்டுகள் வாழ வாழ்த்தியுள்ளதை சொன்னார். எமன் நடுநடுங்கி

தூதர்களை பார்த்து உடனே தனதத்தனை பூலோகத்தில் விடுமாறு கட்டளையிட்டான். தனதத்தன் எம

உபாதனைகள் அனைத்தையும் எமன் அருளால் பார்த்து இதிலிருந்து மீள்வதற்கு ஏதேனும் உபாயம் உண்டா

என்று கேட்டான். அதற்கு எமன் சிவஞானம் அடைதல், சிவபூஜை செய்தல், சிவனடியாரை பணிதல்

இதனன்றியும் நாகை காரோணத்தை பஞ்சகுரோசத்தை கழ்தல் என்றார். 


பின்னர் எமதூதர்கள் தனதத்தனை

பூவுலகில் விட்டனர். தனதத்தன் தூங்கி எழுந்தவனை போல் எழுந்து எமலோகத்தில் நடந்தவைகளை தாய், தந்தை மற்றும் அந்நாட்டு அரசகேசரிக்கும் கூறினான். 


உஜ்ஜையினி மன்னன் அரசகேசரி தன் பரிவாரங்களுடன் நாகையை அடைந்து சகல சிவாலயங்களையும் தரிசித்து ஆனிமாதம் பூதாஷ்டமி அன்று சுவாமி அம்பாளை பல்லக்கில் வைத்து

அலங்கரித்து பஞ்சகுரோச யாத்திரை புறப்பட்டு விழாக்கள் கண்டு காரோணரை தொழுது முக்தி நிலை பெற்றான். மன்னன் அரசகேசரியை அடுத்து தனதத்தனும் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் காயாரோகண சுவாமியை வழிப்பட்டு சுற்றியுள்ள பஞ்ச குரோச தலங்களை தரிசித்து முக்தி பெற்றான். இந்த பஞ்ச குரோசத்தில் உள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் நீரெல்லம் தீர்த்தம் என தலபுராணம் சிறப்பாக விவரிக்கிறது. 


இத்தகைய சிறப்பான தலங்களை தரிசித்து நாமும் பாவ வினைகளில் இருந்து நீங்க எமவாதனை இல்லாது இறைவன் அருள் பெறுவோம்.



நாகை காரோணம் 

பஞ்ச குரோச தலங்கள் 


1.பொய்கைநல்லூர் - ஸ்ரீ நந்திநாதர் திருக்கோயில். 

(வாயில் காவலில் தவறிய நந்தி நாகைக்கு தென்பால் ஆலங்காட்டில் தன் பெயரால் ஒர் லிங்கம் நிறுவி

வழிபாடு செய்து இறைவன் அருளால் தன் தவறை நீக்கிய தலம் ). 


2. பாப்பாகோவில் - ஸ்ரீ கதம்பநாதர் திருக்கோயில்

(கதம்ப முனிவரால் லிங்கம் நிறுவப்பட்டு அவரால் வழிபடப்பட்ட தலம். சூரசம்ஹாரம் முடிந்து முருகப்பெருமான் இந்த கதம்பவன தலத்தில் சத்தி ஆயுதத்தினால் தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட பஞ்ச கடம்ப தலங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது )  


3. சிக்கல் - ஸ்ரீ வெண்ணைநாதர் திருக்கோயில். 


நாய் ஊணை உண்ட காமதேனு வெள்பாலை மரத்தின் அடியில் குற்றம் நீங்க பெற்று அந்த ஆனந்தத்தில் தன் மடியில் உள்ள பாலை சுரந்து பால்குளத்தை ஏற்படுத்தியது. வசிஷ்டர் அதில் திரண்ட வெண்ணையை கொண்டு லிங்கம் நிறுவி வெண்ணைநாதர் என்று பெயரிட்டார். அந்த வெண்ணை பாலில் சிக்கி கொண்டதால் அவ்வூருக்கு சிக்கல் என்று வழங்கப்பட்டது. 


4. பாலூர் - ஸ்ரீ இயமநாதர் திருக்கோயில். 


பிரமன் செய்த யாககுண்டத்திலிருந்து வெளிப்பட்ட லிங்கத்தினை, சூரியன் தீர்த்தம் அமைத்து வழிபட்டு இயமனை

புத்திரனாக பெற்ற தலம்.  


5. வடகுடி - ஸ்ரீ திருமேனியழகர் (சுந்தரலிங்க சுவாமி) திருக்கோயில். சந்திரன் தீர்த்தம் அமைத்து வழிபட்ட தலம்



6. தெத்தி - ஶ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று அக்னி பகவான் இத்தலத்தில் லிங்கத்தை நிறுவி தீர்த்தம் அமைத்து வழிபட்டு பேறு பெற்றான்.



7.நாககன்னிகாபுரம் (நாகூர்)

சுயம்புவாக தோன்றிய ஈசனை வாசுகி என்ற நாக கன்னிகை வழிபாடு செய்து நான்கு புத்திரிகைளை

பெற்ற தலம். இக்கோயிலை சாலிசுக மகாராஜா கட்டினார்.