3 Sept 2021

நாகை காரோணமும், நாவுக்கரசர் கண்ட நடராஜரும்

பல்லவர் காலத்தில் திருநாவுக்கரசரும். ஞானசம்பந்தரும் கடல் #நாகை காரோணத்தான் என்று இக் கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனை தம் பாடல்களில் பணிந்தேத்துகின்றனர்.


காரோணர் சன்னதியை அடுத்து #தியாகராஜர் சன்னதியுள்ளது. அதன் சுவற்றில் வெளிச்சம் குறைந்த நிலையிலுள்ள சிற்பம் கண்ணையும், கருத்தையும் கவருவதாகவுள்ளது. இது போன்ற சிற்பத்தினைத் தமிழகத்தில் காண்பது மிகவும் அரிது. அர்ச்சகரின் தீபஒளியில் மட்டுமே அச்சிற்பத்தினை காணமுடியும். 


அச்சிற்பம் #நடராஜர் சிற்பமாகும். இதன் வலதுபுறம் ஜுரகரேஸ்வரர் சிற்பம் மகிச்சிறியளவில் உள்ளது. ஆடவல்லானின் ஆடலுக்கு இணையாக அம்மையும் ஆடுவதாகவும் வலதுகால் கீழாக முயலகனும் ஒருபுறம் வாணன் #குடமுழா இசைக்க மறுபுறம் #பூதகணங்கள் வாத்திய கருவிகளை கையாளுகின்ற காட்சியும் அமைந்துள்ளது. 


ஆடல் இறைவனின் தலைக்கு மேலாக இடதுபுறத்தில் கங்காதேவியின் உருவமும் வலதுபுறத்தில் தட்சிணாமுர்த்திக்குரிய உருத்திராட்ச மாலையும்,பை மற்றும் மயிற்பீலியினாலான சாமரம் போன்றவையும் வடிக்கப்பட்டுள்ளதால் (உயர்ந்த #பாசுபத விரதம் ஞானம் எனப்படும், #சிவன் யோக ஆசிரியனாக ஞானத்தை வழங்கும் குருவாகவிளங்குகிறார் என ம,இராசமாணிக்கனார் தமது நுலில் குறித்துள்ளார்) இப்பகுதியானது தட்சிணாமூர்த்தியைக்குறிப்பதாக வடிக்கப்பட்டுள்ளது. 


இச்சிற்பத் தொகுதியை நோக்கும்போது அது #சோழர் காலத்தைச் சேர்ந்ததாக அறியமுடிகின்றது. இதனை வடிப்பதற்குக் காரணமாக அமைவது #நாவுக்கரசர் நாகையில் கண்ட நடராஜரின் ஆடல்காட்சியாகும். அக்காட்சியை அவர் தம்முடைய திருவாக்கினால் 


"நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ்சூடி

மறையொலி பாடியாடன் மயானத்து மகிழ்ந்தமைந்தன்

கறைமலி கடல்சூழ்நாகைக் காரோணங் கோயில்கொண்ட

இறைவனை நாளுமேத்த விடும்பைபோ யின்பமாமே".

    - என்று சுட்டுகின்றார். 


#பல்வர் காலத்தில் நாவுக்கரசர் கண்ட நடராஜர் திருவுருவம் சோழ அரசர்களால் பாசுபதசைவத்துடன தொடர்புபடுத்தப்பட்டதை இதன் மூலம் அறிய முடிகின்றது. இச்சிற்பத்தில் #ஆடவல்லான், #கங்காதரர் மற்றும் #தட்சிணாமூர்த்தி ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே வடிவாகக் காணப்படுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இவ்வாறாக மூன்று திருவுருவங்களும் ஒருங்கே அமைந்த சிற்பத்தைத் தமிழகத்தில் எங்கும் காண்பது அரிதாகும். அத்தகு பெருமையினை #நாகை_காரோணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


நன்றி: தில்லைராஜன் இணையப்பக்கம்


#NagaiKaronam #NagaiTemples #Shaivam #SivanTemple #SivaRajathani #Nadarajar

No comments:

Post a Comment